]]

Tuesday, August 21, 2007

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புத்தக கண்காட்சி

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புத்தக கண்காட்சி துவக்கம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மூன்று நாள் புத்தக கண்காட்சி நேற்று துவங்கியது. ஜிப்மர் மருத்துவமனையில் மூன்று நாள் புத்தக கண்காட்சி துவக்கவிழா நேற்று மாலை பாண்டிங் ஹாலில் நடந்தது.


ஜிப்மர் டீன் டாக்டர் ரெட்டி புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தார். மருத்துவ கண்காணிப்பாளர் (பொறுப்பு) சீனிவாசன், பதிவாளர் மகாதேவன், இதயநோய் சிகிச்சை பிரிவு துணைத்தலைவர் பாலச்சந்தர், அறுவை சிகிச்சை துறைத்தலைவர் கருண் அகர்வால், கணக்கு அதிகாரி கண்ணையன், கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அஜித் சகாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த புத்தக கண்காட்சியில் உடலியல், உடற் இயங்கியல், உயிர் வேதியியல், நுண் உயிரியல், நீரழிவு நோய், தோல் வியாதிகள், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை, கதிரியக்கவியல், குழந்தை மருத்துவம் உள்பட பல்வேறு தலைப்புகளில் கீழ் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கும் கண் காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளன.

தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த புத்தக கண்காட்சி நாளை(23ம் தேதி)யுடன் முடிவடைகிறது.

0 comments: