கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சில தொழில் பிரிவுகளில் பயில, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் காலியாக உள்ளன. அவற்றுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆங்கிலம், தமிழ் சுருக்கெழுத்து, தட்டச்சு, தொழில் பிரிவுகளுக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
இயந்திர வரைவாளர், கம்மியர் (மின்னணுவியல்) ஆகிய தொழில் பிரிவுகளில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
துணி வெட்டுதல் மற்றும் தைத்தல் தொழில் பிரிவில் சேர 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
இந்த தொழில் பிரிவுகளில் நேரடி சேர்க்கை 31-8-2007 வரை நடைபெறும்.
ஆண்டுக் கட்டணம் ரூ. 1345. விண்ணப்பக் கட்டணம் ரூ. 50.
அசல் சான்றிதழ்களுடன் வரவேண்டும்
என்று செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
0 comments:
Post a Comment