ரயில்வே பணியில் சேருவதற்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
ரயில்வே துறையில் கமர்சியல் அப்ரன்டிஸ், டிராபிக் அப்ரன்டிஸ், குட்ஸ் கார்டு, கிளார்க் கிரேடு 1, அசிஸ்டன்ட் ஸ்டேஷன் மாஸ்டர் ஆகிய பதவிகளுக்கு முதல்கட்ட தேர்வு கடந்த ஜூலை 22ம் தேதி நடந்தது.
சென்னையில் 103 மையங்களில் நடந்த இத்தேர்வில் 99 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதில், முதல் நான்கு பதவிகளுக்கு 495 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் பிரிவு மாணவர்கள் உட்பட ஆயிரத்து 710 பேர் இரண்டாம் கட்ட தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இரண்டாம் கட்ட தேர்வு, "ஆன்லைன்' தேர்வாக சென்னையில் நடைபெறும். இத்தேர்வு அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெறும்.
அசிஸ்டன்ட் ஸ்டேஷன் மாஸ்டர் பதவிக்கு தகுதித் தேர்வும் நடத்தப்படும். இப்பதவிக்கு 204 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் உட்பட 900 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தகுதித் தேர்வு அடுத்த மாதம் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும்.
தேர்வு முடிவுகளை, www.rrbchennai.net என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment