]]
Showing posts with label உஷார் நிலை. Show all posts
Showing posts with label உஷார் நிலை. Show all posts

Wednesday, September 12, 2007

கடலூரில் சுனாமி எச்சரிக்கை

கடலூரில் சுனாமி எச்சரிக்கை 51 கிராமங்களில் உஷார் நிலை

சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து கடலில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், தேவனாம்பட்டினம், கடலூர் துறைமுகம், தாழங்குடா, பரங்கிப்பேட்டை, கிள்ளை உள்ளிட்ட அனைத்து கடலோர கிராமங்களில் வசிப்பவர்கள் சுனாமி முன் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை வழங்கப்பட்டது.

கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சிற்கு நேற்று மாலை வந்த பொதுமக்கள் அனைவரையும் போலீசார் உடனடியாக வெளியேற்றினர். அப்பகுதியில் பதட்டம் காணப்பட்டது.

தாழங்குடாவில் உள்ள சுனாமி எச்சரிக்கை மையத்தை சுற்றி அப்பகுதி மக்கள் சுனாமி பற்றிய தகவலறிய கூடினர்.

கடலோரத்தில் வசித்து வந்த ஒரு சிலர் குடும்பத்துடன் தங்களின் உறவினர்களின் வீட்டிற்கு செல்ல மூட்டை முடிச்சுகளுடன் தயாராகினர்.

சுனாமி பாதித்த பகுதிகளில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்காக ஆந்திராவிலிருந்து வந்திருந்த 12க்கும் மேற்பட்ட தொழிலாளிகளை அதிகாரிகள் லாரியில் ஏற்றி 'டிட்கோ' அலுவலகத்தில் தங்க வைக்க பாதுகாப்பாக அனுப்பினர்.

கலெக்டர் பேட்டி:

மத்திய அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 51 கடலோர கிராமங்களிலும் "மைக்' மூலம் அறிவிப்பு விடுத்து உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் ராஜேந்திர ரத்னு கூறினார்.

அவர் கூறியதாவது:

கடலோர பகுதிகளில் மீனவர்கள் தாழ்வான பகுதிகளிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லக் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

கலெக்டர் அலுவலக வளகத்தில் உள்ள எச்சரிக்கை மையத்தின் மூலம் கடலோர பகுதிகளில் 51 கிராமங்களுக்கும் 'மைக்' மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலில் சென்று மீன் பிடிக்க வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.