]]
Showing posts with label நாளேடுகளில் நமதூர். Show all posts
Showing posts with label நாளேடுகளில் நமதூர். Show all posts

Wednesday, December 15, 2010

பரங்கிப்பேட்டை அருகே அரசு அனுமதியின்றி கிளிஞ்சல்கள் ஏற்றி சென்ற லாரி பறிமுதல்; டிரைவர் கைது

படிமம்:LittleNeck clams USDA96c1862.jpgபரங்கிப்பேட்டை அருகே அரசு அனுமதியின்றி கிளிஞ்சல்கள் ஏற்றி சென்ற லாரியை போலீசார் பறி முதல் செய்து, டிரைவரை கைது செய்தனர்.

புதுவையில் இருந்து கடலூர் வழியாக சிதம்பரம் நோக்கி ஒரு லாரியில் கார்பைட் கல் செய்ய பயன்படுத்தக்கூடிய ஆற்று கிளிஞ்சல்கள் கடத்தப்பட்டு வருவதாக கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மாவட்ட கலெக்டர் சீத்தாராமன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்து, அந்த லாரியை பிடிக்க உத்தரவிட்டார்.

அதைதொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின்பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, போலீஸ் ஏட்டுகள் ரவி, விஜய குமார் மற்றும் போலீசார் பி.முட்லூர் பகுதிக்கு விரைந்து வந்து அந்த வழியாக தார்பாய் போட்டு வந்த ஒரு லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

சோதனையில் அந்த லாரியில் எவ்வித ஆவணம் இல்லாமல், அரசு அனுமதியின்றி கிளிஞ்சல்களை காரைக்காலுக்கு ஏற்றிச் சென்றது தெரிய வந்தது. அதைதொடர்ந்து லாரி டிரைவர் புவனகிரி அருகே உள்ள மதுராந்தகநல்லூரை சேர்ந்த வேலாயுதம் மகன் காத்தவராயன் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

Source: Daily Thanthi - Photo: MYPNO

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்ட தகுதி அட்டை வழங்கும் விழா!


பரங்கிப்பேட்டை,டிச.16-

பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தி.மு.க. அரசுக்கு விசுவாசமாக இருந்து வாக்களிக்க வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பேசினார்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் பி.முட்லூர் ஊராட்சியில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தகுதி அட்டை வழங்கும் விழா வி.கே.ஐ. திருமண மண்டபத்தில் நடந்தது.

விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் வெங்கடாசலம் வரவேற்று பேசினார். மாவட்ட உதவி செயற்பொறியாளர் சரவணக் குமார், சிதம்பரம் ஆர்.டி.ஓ. ராம ராஜு, தாசில்தார் காமராஜ், பரங்கிப்பேட்டை ஒன்றியக் குழு தலைவர் முத்து. பெருமாள், குமராட்சி ஒன்றியக் குழு தலைவர் மாமல்லன், பேரூராட்சி மன்ற தலைவர் முகமது ïனுஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 2973 பயனாளிகளுக்கு தகுதி அட்டை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 327 பேருக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. கான்கிரீட் வீடு கட்டுவது என்பது கனவாகவே இருந்து வந்த நிலையில் அந்த கனவை நினைவாக்கியவர் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி. இன்னும் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் குடிசைகளே இருக்காது. தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் 5-வது முறையாக நடந்து வரும் ஆட்சியில் ஒவ்வொரு குடும்பத்தினரும் பயன் அடைந்து வருகின்றனர். ஒவ்வொரு தனி நபரும் இந்த அரசால் பயன் அடைந்து வருகிறார்கள்.

இந்த திட்டத்திற்கு அதிக அளவில் செங்கல் தேவைப்படுகிறது. செங்கல் சூளை வைத்து நடத்தும் சுய உதவிக் குழுவினருக்கு கடன் உதவி வழங்க திட்டமிடப்பட்டு உளளது. தமிழகத்தில் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 43 ஆயிரத்து 438 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த மாவட்டத்தில் 6 ஆயிரத்து 407 பேர் இந்த திட்டத்தின் மூலம் பயன் அடைந்து உள்ளனர். இதற்காக கடலூர் மாவட்டத்திற்கு மட்டும் ரூ.19 கோடியே 14 லட்சம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது. 1 லட்சத்து 6 ஆயிரத்து 501 பேருக்கு ரூ.359கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 18 ஆயிரத்து 376 குடும்பங்களுக்கு இலவச டி.வி. வழங்கப்பட்டு உள்ளது. புவனகிரி சட்டமன்ற தொகுதியில் மட்டும் 69 ஆயிரத்து 54 பேருக்கு டி.வி. வழங்கப்பட்டு உள்ளது. இவ்வளவு திட்டங்களை அறிவித்துள்ள இந்த அரசுக்கு விசுவாசமாக இருந்து வாக்களிக்க வேண்டும். 6-வது முறையாக கலைஞர் முதல்- அமைச்சராக வருவார். அதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

அப்போது தான் இது போன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். ஜெயலலிதா வந்தால் இந்த திட்டத்தை ரத்து செய்து விடுவார். சுகாதாரத்துறை சார்பில் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்று நோய், மார்பக புற்று நோய் இவற்றை கண்டறிந்து சிகிச்சை அளிக்க புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார்.

விழாவில் வட்டார வளர்ச்சி அதிகாரி சந்திரகாசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அம்சவள்ளி தியாகராஜன், டாக்டர் மனோகர், நகர செயலாளர் பாண்டியன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் செழியன், மாவட்ட பிரதிநிதிகள் காண்டீபன், மணிவண்ணன், இளைஞரணி அமைப்பாளர் முனவர் உசேன், ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜாராமன், கலையரசன், இளைஞரணி ஆயிப்பேட்டை ஜெயச்சந்திரன், ராம் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Source: Daily Thanhti

Thursday, January 28, 2010

சாலையில் பைக் நிறுத்தி அடாவடி! பரங்கிப்பேட்டையில் டிராஃபிக் ஜாம்!!


செய்தி: தினமலர் இணைய நாளிதழ்

பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

செய்தி: தினமலர் இணைய நாளிதழ்

பரங்கிப்பேட்டை அருகே ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் சஸ்பெண்ட்

செய்தி: தினமலர் இணைய நாளிதழ்

பரங்கிப்பேட்டை அன்னை மகளிர் சுய உதவிக் குழுவுக்கு பரிசுத் தொகை - மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

கடலூர், ஜன. 26:

கடலூரில் செவ்வாய்க்கிழமை நடந்த குடியரசு தினவிழாவில் ரூ. 24.27 லட்சத்துக்கான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ். நடராஜன் வழங்கினார்.

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்த குடியரசு தின விழாவுக்கு வந்த மாவட்ட ஆட்சியரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் வரவேற்றார்.

பின்னர் தேசியக் கொடியை மாவட்ட ஆட்சியர் ஏற்றி வைத்தார்.

போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் பார்வையிட்டார்.

வருவாய்த்துறை சார்பில் 51 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, விதவை மகள் திருமண உதவித் திட்டத்தில் 10 பேருக்கு தலா ரூ. 20 ஆயிரம் உதவித் தொகை உள்ளிட்ட ரூ. 24.27 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

சிறப்பாகப் பணிபுரிந்த தலைமைக் காவலர்கள் 43 பேருக்கு பதக்கங்களை ஆட்சியர் வழங்கினார்.

மாவட்ட அளவில் மணிமேகலை விருது பெறத் தேர்வு செய்யப்பட்ட காட்டுமன்னார்கோவில் ஒன்றியம், மாவட்ட அளவில் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட கம்மாபுரம் சிறுமலர், பரங்கிப்பேட்டை அன்னை, கடலூர் மூகாம்பிகை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் பரிசுத் தொகைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

பள்ளி மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

கடலூர் நகராட்சித் தலைவர் து. தங்கராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி: தினமணி இணைய நாளிதழ்

Tuesday, January 26, 2010

பரங்கிப்பேட்டையில் கொசு மருந்து அடிக்கும் பணி

செய்தி: தினமலர் இணைய நாளிதழ்