]]
Showing posts with label பந்த். Show all posts
Showing posts with label பந்த். Show all posts

Friday, September 28, 2007

பந்த்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு

பந்த்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு பாதுகாப்பு

- கலெக்டர்

சேது சமுத்திர திட்டத்தை விரைவில் நிறைவேற்றக் கோரி அரசு அறிவித்துள்ள முழு அடைப்பு பேராட்டத்திற்கு கடலூரில் மக்களின் அத்தியாவசிய பணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என கலெக்டர் ராஜேந்திர ரத்னு கூறினார்.

சேது சமுத்திர திட்டத்தை விரைவில் நிறைவேற்றக் கோரி தமிழகத்தில் 1ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என தி.மு.க., அரசு மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கடலூர் கலெக்டர் ராஜேந்திர ரத்னு நிருபர்களிடம் கூறியது:

தமிழகத்தில் சேது சமுத்திர திட்டத்தை விரைவில் நிறைவேற்றக் கோரி வரும் 1ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு பேராட்டம் நடக்கிறது.

அதனையொட்டி கடலூர் மாவட்டத்தில் மக்களின் அத்தியாவசிய பணிகளான குடிநீர், மின்சாரம், செய்தித் தாள்கள், பால் நிலையங்கள், டெலிபோன் சேவைகள், மருத்துவமனைகள் ஆகியவற்றிற்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும்.

எந்த அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம், காவல் துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.