]]
Showing posts with label பா.ம.க.. Show all posts
Showing posts with label பா.ம.க.. Show all posts

Sunday, August 26, 2007

இஸ்லாமியருக்கு தீங்கு ஏற்பட்டால் பா.ம.க., குரல் கொடுக்கும்

இஸ்லாமியருக்கு தீங்கு ஏற்பட்டால் பா.ம.க., குரல் கொடுக்கும்

'இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு தீங்கு ஏற்பட்டால் ஆதரவு குரல் கொடுப்போம்,' என திருச்சியில் நடந்த மண்டல வாழ்வுரிமை மாநாட்டில், பா.ம.க., ராமதாஸ் பேசினார்.


திருச்சி உழவர்சந்தை மைதானத்தில் பா.ம.க., சார்பில், மண்டல வாழ்வுரிமை மாநாடு நடந்தது. கட்சித் தலைவர் கோ.க.மணி தலைமை தாங்கினார்.

பா.ம.க., ராமதாஸ் பேசியதாவது:

ஓட்டுக்காக, அரசியலுக்காக இந்த மாநாட்டை நடத்தவில்லை. மதம், ஜாதி பெயரால் ஒரு துளி ரத்தம் சிந்தக் கூடாது. மதநல்லிணக்கம் எல்லாரிடமும் நிறைந்திருக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். உங்களது கோரிக்கைக்காக கடுமையாக போராடுவோம்.


நீதிபதி ஜனார்த்தன் குழு அறிக்கை பெற்று, சிறப்பு சட்டசபையை கூட்டி இடஒதுக்கீட்டை தடுக்க முடியாத வகையில், முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு தீங்கு ஏற்பட்டால் ஆதரவு குரல் கொடுப்போம். தமிழகத்தில் உண்மையான சமூகநீதி இல்லை. உடனடியாக கொண்டு வரப்பட வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

ரயில்வே இணையமைச்சர் வேலு பேசுகையில், "இந்திய ரயில்வேயில் பணியாற்றுவோரில் வெறும் 3.1 சதவீதம் மட்டுமே முஸ்லிம்கள் உள்ளனர். ரயில்வே அமைச்சரிடம் பேசி, ரயில்வேயில் அதிகளவில் முஸ்லிம்கள் வேலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.