இந்தியாவின் நவீன தகவல் தொடர்பு திறன் கொண்ட இன்சாட் 4 சி ஆர் செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி - எஃப் 04 ராக்கெட் மூலம் ஞாயிறன்று மாலை 4.21 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்த இந்த செயற்கைக் கோள், தொழில்நுட்ப காரணங்களுக்காக சுமார் 2 மணி நேரம் வரை தாமதமாக மாலை 6.20 மணியளவில் செலுத்தப்பட்டது.
3 கட்டங்களாக திட்டமிடப்பட்ட வேகத்துடன் டிரான்ஸ்பாண்டர்களை விண்வட்டப்பாதையில் செலுத்தியதும், விஞ்ஞானிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.
இன்சாட் 4 சி ஆர் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்திய இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் வெற்றிகரமாக இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகள் அனைவருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இந்த செயற்கைக்கோள் மூலம் வீடுகளுக்கு நேரடி ஒளிபரப்பு வசதிகளை அளிப்பதற்காக உயர் சக்தி வாய்ந்த 12 கே.யு. பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் விண்ணுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
முக்கியத்தலைவர்களும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்
Showing posts with label விண்கலம். Show all posts
Showing posts with label விண்கலம். Show all posts
Monday, September 3, 2007
இந்தியா விண்ணில் வரைந்த வெற்றி: இன்சாட் 4சி ஆர்.
பதிப்பு
வாசகன்
at
0
comments
Subscribe to:
Posts (Atom)

