]]
Showing posts with label ஸ்காலர்ஷிப். Show all posts
Showing posts with label ஸ்காலர்ஷிப். Show all posts

Friday, September 7, 2007

ரூ.5 ஆயிரம் கோடி கல்வி உதவித் தொகை

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி கல்வி உதவித் தொகை
மத்திய மந்திரி சபை ஒப்புதல்

தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக ரூ.5 ஆயிரம் கோடி ரூபாய் உதவித் தொகை வழங்குவதற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய மந்திரி சபை கூட்டம் நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.

இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் கூறியதாவது:-

கிராமப் புறங்களில் வேலை வாய்ப்பினை பெருக்கும் திட்டத்தின் தற்போதைய வடிவம் அடுத்த ஆண்டு (2008) மார்ச் வரை தொடரும். இதற்கான ரூ.445 கோடி ஒதுக்கீட்டு தொகையை மத்திய மந்திரி சபை அனுமதித்து உள்ளது.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி மேம்பாட்டுக்காக 5 ஆயிரம் கோடி ரூபாய் உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்குவதற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்திருக்கிறது.

இந்த உதவித் தொகை பெறும் மாணவர்களின் பெற்றோர்களது சம்பளம் ஒரு லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்கவேண்டும்.

இவ்வாறு ப. சிதம்பரம் கூறினார்.