10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் சான்றிதழ் விநியோகம்
கடலுர் : கடலுர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு இன்று காலை முதல் பள்ளிகளில் சான்றிதழ் வழங்கப்படும்.
கடந்த மார்ச் மாதம் நடந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலுர் வருவாய் மாவட்டத்தில் 30 ஆயிரத்து 636 பேரும் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 4 ஆயிரத்து 249 பேரும் தேர்வு எழுதினர். கடந்த வாரம் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று காலை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு மதியம் முதல் மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் அனைத்து மாவட்டங்களிலும் சான்றிதழ்களை நேற்றே (13ம் தேதி) மாவட்ட கல்வி அலுவலகங்க ளுக்கு அனுப்பி அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் வழங்க அறிவுறுத்தப்பட்டது. உடனடியாக அனைத்து பள்ளிகளுக்கும் தகவல் தெரிவித்து காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு சென்று சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.
Thursday, June 14, 2007
10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் சான்றிதழ் விநியோகம்
பதிப்பு பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ at
Labels: 10ம் வகுப்பு, சான்றிதழ் விநியோகம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment