]]

Thursday, June 14, 2007

10ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு

10ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு

கடலுர் : கடலுர் மாவட்டத்தில் அந்தந்த வட்டத்திலுள்ள பள்ளிகளில் 10ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் வரும் 15, 18, 19 தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம்.
இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் 14ம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து கடலுõர் மாவட்டவேலைவாய்ப்பு அலுவலகத்தில் திரளாக வந்து பதிவு செய்வதை போக்கவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும் அந்தந்த பகுதி பள்ளிகளிலேயே பதிவு செய்து அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
இதன்படி காட்டு மன்னார்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளி, திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய வட்டத்திலுள்ள பள்ளிகளில் 15, 18, 19 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பதிவு மேற்கொள் ளப்பட்டு உடன் பதிவு அடையாள அட்டை கொடுக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

பண்ருட்டி மற்றும் கடலுர் வட்டத்திலுள்ள மனுதாரர்கள் கடலுõர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலேயே பதியவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

மாணவர்கள் தங்களது 10ம் வகுப்பு மதிப்பெண் சான்று, மாற்று சான்றிதழுடன் அவற்றிற்கான ஜெராக்ஸ், கடலுர் மாவட்ட முகவரியுடன் உள்ள குடும்ப அட்டையின் சான்றொப்பம் இடப்பட்ட ஜெராக்சுடன் அந்தந்த வட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு காலை 10 மணி முதல் நேரில் சென்று பதியலாம்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 comments: