10 வது புத்தகக் கண்காட்சிக்கு தயாராகிறது நெய்வேலி
என்.எல்.சி. நிறுவன ஆதரவுடன் நடைபெறும் 10-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஜூலை 7 முதல் 16-ம் தேதி வரை வட்டம் 11 லிக்னைட் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
நெய்வேலி புத்தகக் கண்காட்சி 1998-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதிலும் இருந்து 150-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் இக் கண்காட்சியில் பங்கேற்று, தங்கள் புத்தகங்களை விற்பனை செய்து வருகின்றனர்..
இங்கு வாங்கப்படும் புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும், வாசகர்களின் வசதிக்கேற்ப வங்கிச் சேவை, சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு தினமணியும், புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுகிகிடையே நடத்திய கட்டுரைப் போட்டி, தமிழ் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியும், தமிழ் குறும்படப் போட்டியும் நடைபெறவுள்ளது.
சிறுவர்,சிறுமியருக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் புத்தகக் கண்காட்சி திடலில் அமைக்கப்பட்டுள்ளன.
புத்தகக் கண்காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு சிற்றுண்டி வளாகமும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment