]]

Saturday, July 28, 2007

அக்டோபர் மாத பிளஸ் 2 தேர்வு

அக்டோபர் மாத பிளஸ் 2 தேர்வுக்கு
30-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

அக்டோபர் மாதம் நடைபெற உள்ள பிளஸ்-2 தேர்வுக்கு 30-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மாணவர்கள் ஒருவருடத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளை 3 முறை எழுதலாம். மார்ச் மாதத்தேர்வில் பெயிலானால் ஜுலை மாதம் நடைபெறும் சிறப்பு துணைத்தேர்வை எழுதலாம். அதிலும் பெயிலானால் அக்டோபர் மாதம் நடைபெறும் தேர்வை எழுதலாம்.


அதன்படி இப்போது சிறப்பு துணைத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் நடைபெற உள்ள பிளஸ்-2 தேர்வுக்கு விண்ணப்பங்கள் 30-ந்தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரை வழங்கப்பட உள்ளன.

படிவங்கள் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், அரசு தேர்வு மண்டல இணை மற்றும் துணை இயக்குனர் அலுவலகங்கள் ஆகியவற்றில் கிடைக்கும்.

தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க எச்.வகை படிவத்தை பயன்படுத்த வேண்டும்.


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டு இடைவெளியும் 1-9-2007 அன்று 16 வயது நிரம்பியவர்கள் எச்.பி. வகை படிவத்தை பயன்படுத்தலாம்.

2005-2006ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பிளஸ் 2 (புதிய பாடத்திட்டம்) பாடத்திட்டத்தின்படிதான் தேர்வு நடைபெறும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை ரிஜிஸ்டர் தபாலில் மட்டுமே அந்தந்த பகுதியில் உள்ள அரசு தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும்.

விண்ணப்பம் கிடைக்க கடைசி நாள் ஆகஸ்டு 4-ந்தேதி.


மேலும் விவரங்கள் விண்ணப்பம் வாங்கும் இடத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் இருக்கும்.


இந்த தகவலை அரசு தேர்வு இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்தார்.

0 comments: