]]

Saturday, July 28, 2007

பரங்கிப்பேட்டை அருகே இறால் பண்ணை அதிபர் வீட்டில்

பரங்கிப்பேட்டை அருகே இறால் பண்ணை அதிபர் வீட்டில் ரூ.45 ஆயிரம் திருட்டு

பரங்கிப்பேட்டை அருகே இறால் பண்ணை அதிபர் வீட்டின் ஜன்னலை உடைத்து ரூ. 45 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள பி.முட்லூரை சேர்ந்தவர் இஸ்மாயில். இவருடைய மகன் ஜெய்லானி (வயது 48).இவர் பரங்கிப்பேட்டை உள்பட பல இடங்களில் இறால் பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.


ஜெய்லானி வீட்டில் உள்ளவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளிïருக்கு சென்று விட்டனர். ஜெய்லானி மட்டும் வீட்டில் இருந்தார். அவர் நேற்று முன்தினம் இரவு தனது இறால் பண்ணையை பார்ப்பதற்காக சென்று விட்டார்.



நேற்று அதிகாலை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் உள்ள ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு கிடந்தது. உடன் வீட்டின் உள்ளே சென்று ஜெய்லானி பார்த்தார். வீட்டில் இருந்த பீரோவும் உடைந்து கிடந்தது. அதில் இருந்த ரொக்கப்பணம் ரூ.45 ஆயிரத்தை காணவில்லை.

இது பற்றி ஜெய்லானி பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், சப்- இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: