]]

Sunday, July 1, 2007

பேரூராட்சிகளுக்கு தனி இணைய தளம் துவக்கம்

பேரூராட்சிகளுக்கு தனி இணைய தளம் துவக்கம்


பேரூராட்சிகளுக்கென தனி இணைய தளம் துவக்கப்பட்டுள்ளது. டெண்டர் படிவம் போன்றவற்றை இணைய தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

பேரூராட்சிகளின் இயக்குனர் கோபால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள 561 பேரூராட்சிகளுக்கும் கம்ப்யூட்டர் வழங்கப்பட்டுள்ளது. "ஆன் லைன்' மூலம் தகவல்களை பரிமாற்றம் செய்வதை நோக்கமாக கொண்டு இத்துறை செயல்படுகிறது. அனைத்து பேரூராட்சிகளுக்கும் இணைய தளம் உருவாக்கப்படும் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, www.townpanchayats.tn.nic.in என்ற இணைய தள முகவரியில் பேரூராட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தை பயன்படுத்தி பேரூராட்சிகள் பற்றிய பொதுத் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

பேரூராட்சிகளில் சாலைப் பணிகள், வடிகால் அமைத்தல், கட்டடங்கள், தெருவிளக்குகள், குடிநீர் வழங்கல் பணிகள், பூங்கா அமைத்தல், பஸ் ஸ்டாண்ட் புதுப்பித்தல் போன்ற வேலைகள் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் நடந்து வருகின்றன. இப்பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளுக்கென இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

அனைத்து பேரூராட்சிகளிலும் ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட வேலைகள் பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றுக்கான டெண்டர் அறிவிப்பு, வரைபடம், டெண்டர் படிவம் போன்றவற்றை இணையதளங்களில் பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆகிய இந்த இணையதளங்களில் மாவட்ட வாரியாக, பேரூராட்சிகள் வாரியாக, பணிகள் வாரியாக தேடும் வசதியும், ஒப்பந்தப்புள்ளி தொடர்பான திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப் புள்ளிகள் பெற முடியும்.

இவ்வாறு கோபால் தெரிவித்துள்ளார்.

0 comments: