]]

Sunday, July 1, 2007

காவலர் எழுத்துத் தேர்விற்கு இலவச பயிற்சி

காவலர் எழுத்துத் தேர்விற்கு 3ம் தேதி இலவச பயிற்சி

எம்.ஆர்.கே., கல்வி அறக்கட்டளை சார்பில் காவலர் எழுத்துத் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் ஜூலை 3ம் தேதி துவங்குகிறது.

எம்.ஆர்.கே., கல்வி அறக்கட்டளை சார்பில் காவலர் தேர்வுக்கான எழுத்துத் தேர்விற்காக நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பு வரும் 3ம் தேதி, குறிஞ்சிப்பாடி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் துவகக விழா நடக்கிறது. பயிற்சி வகுப்பை பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பயிற்சி வகுப்பை துவக்கி வைக்கின்றார்.

பயிற்சி வகுப்புகள் தினம் காலை 6.30 மணியிலிருந்து 8 மணி வரை குறிஞ்சிப்பாடி எம்.எல்.ஏ., அலுவலக வளகத்தில் நடக்கிறது.

இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் எம்.எல்.ஏ., அலுவலகம் குறிஞ்சிப்பாடி, தொலைபேசி எண் 04142258500, 298500 என்ற முகவரியிலும், தொலைபேசியிலும் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

0 comments: