பரங்கிப்பேட்டை அருகே சட்ட விழிப்புணர்வு முகாம்
பரங்கிப்பேட்டை அடுத்த தெற்கு சின்னூர் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் சட்ட பணிக் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முகாமிற்கு பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட் பிருந்தா தலைமை தாங்கினார். கிராம தலைவர் கோவிந்தசாமி வரவேற்றார். பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், வக்கீல் சங்க தலைவர் ஜெயச்சந்திரன், வக்கீல்கள் வீரசிங்கம், பக்கிரிசாமி, சகஜானந்தம், சேகர் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
முகாமில் பொதுமக்கள் சார்பில் 20 மனுக்கள் கொடுக்கப்பட்டன. நிர்வாக உதவியாளர் வைத்தியநாதன் நன்றி கூறினார்.
0 comments:
Post a Comment