]]

Tuesday, July 17, 2007

பரங்கிப்பேட்டை ஒன்றிய கருத்தாய்வு மையக்கூட்டம்

பரங்கிப்பேட்டை ஒன்றிய கருத்தாய்வு மையக்கூட்டம்

சிதம்பரம், ஜூலை 17:

அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் இக்கல்வியாண்டிற்கான முதல் கருத்தாய்வு மையக்கூட்டம் 14 -ம் தேதி சனிக்கிழமை பல்வேறு பள்ளிகளில் நடைபெற்றது.


வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆ.கலைச்செல்வன் மேற்பார்வையில் சிலம்பிமங்கலம், சேந்திரக்கிள்ளை, அரியகோஷ்டி, பு.முட்லூர், பள்ளிப்படை, கணக்கரப்பட்டு, கிள்ளைபட்டினவர் ஆகிய ஊர்களில் உள்ள ஊராட்சி ஒன்றியப்பள்ளிகளில் கருத்தாய்வு மையக்கூட்டம் நடைபெற்றது. அனைத்து மையங்களிலும் சுமார் 280 ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர்.


புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள செயல்வழிக்கற்றல் முறையை செயல்படுத்தும் விதம் குறித்தும், ஆசிரியர்கனிள் சந்தேகங்கள் குறித்தும் ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் மாதிரிப்பள்ளி ஆசிரியர்களும் விளக்கமளித்தனர்.

0 comments: