பரங்கிப்பேட்டையில் பசு மாடு திருடிய வாலிபர்கள் கைது
பரங்கிப்பேட்டையில் ரூ.15 ஆயிரம் மதிப்புடைய பசு மாட்டை திருடி சென்று கரிக்கடையில் விற்ற இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை மாதாக் கோவில் பகுதியை சேர்ந்தவர் விஜயா (42). இவருக்கு சொந்தமான பசு மாட்டை வீட்டிற்கு பின்புறம் கட்டியிருந்தார். அந்த மாட்டை அதே பகுதியை சேர்ந்த ரமேஷ், மகேஷ் ஆகியோர் திருடிச் சென்று பரங்கிப்பேட்டையில் உள்ள கரிக்கடையில் விற்றனர். இதன் மதிப்பு ரூ. 15 ஆயிரமாகும்.
இது குறித்து விஜயா கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், ஏட்டு முருகேசன் ஆகியோர் வழக்கு பதிந்து ரமேஷ் (30), மகேஷ் (32) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.
0 comments:
Post a Comment