]]

Sunday, August 19, 2007

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்... தொடர்

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்
Degree & Diploma Courses

S. ஆபிதீன் M.A., M.Sc., M.Phill., B.Ed.,

விரிவுரையாளர், விலங்கியல் துறை

செயலர், முன்னாள் மாணவர் கழகம்
Dr. ஜாகிர் உசேன் கல்லூரி, இளையான்குடி.

E-mail: abideen245400@yahoo.com
Ph: 14564-245400/265252 Ilayangudi, Sivaganga District


-------------------------------------------------------------------------------------------------

ஆசிரியர் உரை

அன்புடையீர்!

இது நவீன விஞ்ஞான உலகம். போட்டி போடும் போட்டிகள் நிறைந்த உலகம் சரியான வழிகாட்டுதல் இல்லாவிட்டால் வாழ, வாழவிடாத உலகம். நமது சுற்று வட்டாரத்தில் அசாதாரண திறமை படைத்த எத்தனையோ மாணவர்கள் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் மிகச் சாதாரண வட்டத்திற்குள் தன்னை சுருட்டிக் கொள்ளும் துர்பாக்ய நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எதையோ படித்துவிட்டு எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதில்லை. சிந்தித்து விட்டு எதிர்காலமுள்ள படிப்புகளை படிக்க வைக்க வேண்டும். வளமான வாழ்விற்கு வழிகாட்ட வேண்டும் என்ற ஆவல்களுக்குப் பிறந்த குழந்தைதான் இந்த மலர்.


இந்த மலரிலே 10ம் வகுப்பு 12 மற்றும் பட்டப்படிப்பு படித்துவிட்டு அடுத்து என்ன படிக்கலாம்? என்று திணறிக் கொண்டிருக்கும் மாணவர்களின் திறமைக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப, குடும்பச் சூழ்நிலை மற்றும் பொருளாதாரத்திற்கேற்ப அதிகம் அறிமுகம் இல்லாத படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில் மலரில் குறிப்பிட்டுள்ள எந்தக் கல்வியும் கல்வி நிறுவனமும் சிபாரிசு செய்யப்படவில்லை என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

இந்த மலரை கொடுக்க எல்லா வகையில் ஊக்கமும் உற்சாகமும் தந்த கல்லூரியின் தாளாளர் ஹாஜி. கே.ஈ. அப்துல் கரீம் அவர்களுக்கும், கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். லியாகத் அலிகான் அவர்களுக்கும், அனைத்துப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மலர் முன்னாள் மாணவர் கழகத்தின் நிதி ஆதாரம் கருதி தயாரிக்கப்பட்டிருப்பதால் இதற்கான அனைத்து செலவுகளையும் விளம்பரங்கள் மற்றும் வாழ்த்துக்கள் மூலம் தந்து உதவிய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியை முன்னாள் மாணவர் கழகத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

சிநேகமுடன்

எஸ். ஆபிதீன்
25-02-2004

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்

மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!

0 comments: