கப்பல் கட்டும் துறைமுகத்திற்கு பரங்கிப்பேட்டை பெயரிட கோரிக்கை
பரங்கிப்பேட்டை : கப்பல் கட்டும் துறைமுகத்திற்கு பரங்கிப்பேட்டை பெயர் வைக்க கலெக்டருக்கு பேரூராட்சி மன்ற தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் முகமது யூனுஸ் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:
கடலூர் மாவட்டம் ரெட்டியார்பேட்டை, புதுக்குப்பம் பகுதியில் அரசு சார்பில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படுகிறது. அந்த துறைமுகத்திற்கு சிலம்பிமங்கலம் துறைமுகம் என பெயர் வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
புதுக்குப்பத்திற்கு மிக அருகில் உள்ள பழமை வாய்ந்த கப்பல் கட்டும் துறைமுகத்திற்கு பரங்கிப்பேட்டை துறைமுகம் என பெயர் வைக்க வேண்டும்.
பழைய துறைமுக நகரமான பரங்கிப்பேட்டை போர்த்துகீசியர்கள் ஆட்சி காலத்தில் போர்ட்நோவோ என்ற பெயரில் இருந்தது. நீண்ட வரலாறுகளை உள்ளடக்கிய பழமை வாய்ந்த நகரமாகும். அதனால் பரங்கிப்பேட்டையை துறைமுகமாக அறிவிக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்
0 comments:
Post a Comment