]]
Showing posts with label வேளாண்மை. Show all posts
Showing posts with label வேளாண்மை. Show all posts

Friday, September 7, 2007

கூட்டுறவு வங்கிகளில் சலுகை பெற கால அவகாசம் நீடிப்பு

கூட்டுறவு வங்கிகளில் பண்ணை சாரா கடன்களுக்கு சலுகை பெற கால அவகாசம் நீடிப்பு

மண்டல இணைப்பதிவாளர் மிருணாளினி தகவல்

கூட்டுறவு வங்கிகளில் பண்ணை சாரா கடன்களுக்கு சலுகை பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மண்டல இணைப்பதிவாளர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கடலூர் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் ஆகியவற்றில் பண்ணை சாராக் கடன் பெற்றவர்களின் சுமையை குறைக்கும் வகையில் வட்டி குறைப்பு திட்டம் 2006-ன் கீழ் தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி 27.12.2006-ல் தவணை தவறிய அனைத்து பண்ணை சாராக் கடன்களுக்கும் 31.3.2001 தேதியிலிருந்து வட்டி விகிதம் 18 சதவிதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைத்தும், அபராத வட்டி 3 சதவீதம் தள்ளுபடி செய்தும் உள்ளது.

இந்த சலுகைகளை அடைய பயன்தாரர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய தவணை தவறிய கடன் தொகையில் குறைந்த பட்சம் 25 சதவீத தொகையை 30.06.2007-க்குள் செலுத்தி வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும், எஞ்சிய 75 சதவீத தவணை தவறிய கடன் பாக்கித் தொகையை 31.12.2007-க்குகள் முழுமையாக செலுத்த வேண்டும் என்றும் அரசு அறிவித்திருந்தது.

இந்த திட்டத்துக்கு கடன்தாரர்களிடம் மிகுந்த வரவேற்பு உளளதால் அவர்களின் நலன் கருதி இத்திட்டத்துக்கு அளித்துள்ள கால அவகாசத்தை நீட்டித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இதன்படி கடன்தாரர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய 25 சதவீத தொகையை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தி வங்கியுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு எஞ்சிய 75 சதவீத தொகையை வருகிற டிசம்பர் 31-ந்தேதிக்குள் செலுத்தி கடன் நேர் செய்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்த கால நீட்டிப்பினை பயன்படுத்தி தகுதியுள்ள அனைத்து கடன்தாரர்களும் தவறாமல் பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் இணைப்பதிவாளர் மிருணாளினி கூறியுள்ளார்.

Monday, July 23, 2007

வங்கிக் கடன் பெறாத விவசாயிகளுக்கு அரசு மானியத்துடன் காப்பீடு திட்டம்

வங்கிக் கடன் பெறாத விவசாயிகளுக்கு அரசு மானியத்துடன் காப்பீடு திட்டம்
வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்

வங்கிக் கடன் பெறாத விவசாயிகளுக்கு தேசிய வேளாண்மை காப்பீட்டு திட்டத்தில் பயனடையலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.


இது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தேசிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்று சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இந்திய வேளான் காப்பீட்டு நிறுவனம் பயிர் காப்பீடு திட்டம் நடைமுறையில் இருக்கிறது. தற்போது வங்கியில் கடன் பெறாத விவசாயிகளும் இந்த திட்டத்தால் பயனடையலாம்.

வங்கிக் கடன் பெறாத விவசாயிகள் நெல், ராகி,சோளம் பயிர்களுக்கு 2.5 சதவீத பிரிமியத் தொகை செலுத்த வேண்டும். ஒரு ஏக்கர் நெல்லுக்கு பிரிமியத் தொகையாக ரூ.132 செலுத்தவேண்டும். இந்த தொகையில் 50 சதவீதம் மாநில அரசு மானியமாக வழங்குகிறது. இதனால் விவசாயிகள் பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.66 செலுத்தினால் போதும்.

எனவே கடலூர் மாவட்ட விவசாயிகள் இயற்கை சீற்றங்களிலிருந்து தங்கள் பயிர்களை பாதுகாத்துக் கொள்ள பயிர் காப்பீடு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த திட்டத்தில் சொர்னாவாரி, குறுவை நெற்பயிர் காப்பீடு செய்வதற்கு வரும் 31ம் தேதி கடைசி நாளாகும்.