இந்திய விமானப் படையில் குருப் "ஒய்' பணியில் சேர விரும்புபவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது பற்றி கடலூர் கலெக்டர் ராஜேந்திர ரத்னு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
இந்திய விமானப்படையில் குருப் "ஒய்' பணிக்கு ஆட் சேர்ப்பு செய்யப்படவுள்ளது. இதற்கான
கல்வித் தகுதி 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு படித்து அறிவியல் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு 01.01.1987ம் தேதி, 28.02.1991ம் தேதிககுள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
உடல் தகுதியில் 152.5 செ.மீட்டர் உயரமும், 5 செ.மீட்டர் மார்பளவு விரிய வேண்டும். கண் பார்வை 6/36 இருக்க வேண்டும். கண்ணாடி அணிந்திருக்கக் கூடாது.
இந்த தகுதிகள் உள்ள இளைஞர்கள் வரும் ஜூலை 16ம் தேதிக்குள் , தலைவர், சென்ட்ரல் எர்மென் செக்ஷன் போர்டு, தபால் பெட்டி எண் : 11807, டில்லி என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment