]]
Showing posts with label விண்ணப்பங்கள். Show all posts
Showing posts with label விண்ணப்பங்கள். Show all posts

Wednesday, October 24, 2007

கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தொழிலாளர் குழந்தைகளுக்கு பாடநூல் மற்றும் கல்வி உதவித் தொகை பெற வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என கடலூர் மாவட்ட தொழிலாளர் நல ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கடலூர் மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் சசிகலா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

இதில் குழந்தைகள் காப்பகம், தையற்பயிற்சி வகுப்பு, தொழிலாளர் நலப்படிப்பகம், தொழிலாளர்களுக்கு மூக்கு கண்ணாடி வாங்க உதவித்தொகை வழங்கப்படுகிறது.

உடல் ஊனமுற்றோர் மற்றும் அவரது குழந்தைகள் மூன்று சக்கர வண்டி பெறுவதற்கும், செயற்கை உறுப்புகள் வாங்கவும், காது கேளா தோர் மற்றும் காது கேளாத குழந்தைகளுக்கு காது கேட் கும் கருவி வாங்கவும், தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து படிப்பதற்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதே போன்று பிளஸ் 1 முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை படிக்க தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பாடநூல் உதவித் தொகையும்,

பொறியியல், மருத்துவம், சட்டம் மற்றும் விவசாயம் போன்ற தொழிற் கல்வி, தொழிற் பயிற்சி கல்வி மற்றும் மேல்நிலைப் கல்வி படிப்பதற்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற இருவருக்கு ஊக்கத் தொகையும்,

பணியின் போது தொழிலாளர் இறந்தால் ஈமச் சடங்கிற்கு உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.

அடிப்படை கணினி பயிற்சி பெற உதவித் தொகை பெறவும், பாடநூல் உதவித் தொகை மற்றும் கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி ஊக்கத் தொகை ஆகியவற்றை பெற வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நலத் திட்டங்கள் குறித்த விபரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் பெற

"செயலாளர்",
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம்,
த.பெ. எண் : 718,
சென்னை - 60000 6'

என்ற முகவரிக்கு சுய விலாசமிட்ட ஸ்டாம்புகள் ஒட்டிய உறையுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.

Friday, September 7, 2007

தொலைக்கல்வி தேர்வுகள் விண்ணப்பிக்க வேண்டுகோள்

பல்கலை., தொலைக்கல்வி தேர்வுகள் விண்ணப்பிக்க வேண்டுகோள்

மதுரை காமராஜ் பல்கலைக்கழக தொலைக்கல்வி மாணவர்களுக்கான இளநிலை, முதுநிலை பட்டம், திறந்தவெளி, சான்றிதழ், டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கு டிசம்பர் மாதம் செமஸ்டர் அல்லாத தேர்வுகள் நடக்க இருக்கின்றன.

இவற்றுக்கான விண்ணப்பங்களை பல்கலை.,யில் சமர்ப்பிக்க வேண்டிய தேதிகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. தேதிகள் வருமாறு:

அபராதம் இல்லாமல் 24.9.2007,

ரூ.100 அபராத தொகையுடன் 10.10.2007,

ரூ.200 அபராத தொகையுடன் 18.10.2007

தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தனித்தேர்வர்கள், தேர்வு விண்ணப்பங்களை கூடுதல் தேர்வாணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

தபால் மூலம் பெற விரும்புவோர் ரூ.15க்கான ஸ்டாம்ப் ஒட்டிய சுயமுகவரி எழுதப்பட்ட உறையை இணைத்து, கூடுதல் தேர்வாணையர் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஏப். 2000-03 மற்றும் அதற்கு முன்னர் தொலைக்கல்வியில் பி.ஏ.,/பி.எஸ்சி., பகுதி 2 ஆங்கிலம், பி.ஏ., பகுதி 3ல் முக்கிய பாடங்களாக ஆங்கிலம், அரசியல் விஞ்ஞானம், சமூக அறிவியல், பி.காம்., ஆகிய பாடத் திட்டங்கள் டிச.2007 தேர்வுகளுடன் முடிகின்றன.

இந்த பாடத்திட்டங்களில் படித்தவர்கள் இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி டிச.2007 தேர்வுகளுக்கு தவறாமல் விண்ணப்பிக்க வேண்டும்.

காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

இத்தகவலை கூடுதல் தேர்வாணையர் திருமலை தெரிவித்துள்ளார்.

Friday, July 13, 2007

தொழில்நுட்ப தேர்வுக்கு 16 ல் விண்ணப்பம்

தொழில்நுட்ப தேர்வுக்கு 16 ல் விண்ணப்பம்

தையல், ஓவியம் உள்ளிட்ட அரசு தொழில்நுட்பத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள், வரும் 16ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.

இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஓவியம், தையல், இசை, நடனம், அச்சுக்கலை, விவசாயம் மற்றும் கைத்தறி நெசவு ஆகியவற்றுக்கான தொழில்நுட்பத் தேர்வுகள், வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது.

கீழ்நிலை, மேல்நிலை ஆகிய இரு நிலைகளில் தேர்வுகள் நடைபெறும்.

கீழ்நிலை தேர்வு எழுதுபவர்கள், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேல்நிலை தேர்வு எழுதுபவர்கள், அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் பயின்று இடைநிலைப் பள்ளி இறுதிச் சான்றிதழோ அல்லது அதற்கு சமமான சான்றிதழோ பெற்றிருத்தல் வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்கள், வரும் 16ம் தேதி முதல் ஆகஸ்ட் 16ம் தேதி வரை வழங்கப்படும்.

முதன்மைக் கல்வி அலுவலகங்கள், தேர்வுத்துறை இயக்குனரகம், அரசுத் தேர்வுகள் மண்டல அலுவலகங்கள் ஆகிய இடங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

தேர்வுக் கட்டணமாக, நடனப் பிரிவிற்கு கீழ் நிலையாக இருந்தால் ரூ.57 ம், மேல்நிலையாக இருந்தால் ரூ.62 ம் செலுத்த வேண்டும். இசைப் பிரிவிற்கு முறையே ரூ. 27, ரூ.37 வீதமும், மற்ற பாடங்களுக்கு முறையே ரூ.37, ரூ.47 என்ற வீதத்திலும் செலுத்த வேண்டும்.

கட்டணத்தை, கருவூல ரசீது மூலம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்

Saturday, July 7, 2007

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு உதவித் தொகை

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வேலை இல்லாதவர்கள், உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது


கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

இதற்கான தகுதிகள் 10ம் வகுப்பு, பிளஸ் 2 , பட்டப் படிப்பு முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 45 வயதும், மற்ற பிரிவினர்களுக்கு 40 வயது மிகாமல் இருக்கவேண்டும்.

பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் துறையில் வேலையில் இருப்பவராக இருக்க கூடாது.

ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் தற்போது சேர்ந்து படிக்க கூடாது. ஆனால் அஞ்சல் வழிக் கல்வி, தொலை தூரக் கல்வி பயில்வோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

மனுதாரர் தமிழ்நாட்டில் படித்தவராக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 15 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும்.

குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்

உள்ளிட்ட தகுதி உள்ளவர்கள் அவர்களது கல்விச் சான்று மற்றும் வேலை வாய்ப்பக அடையாள அட்டை ஆகியவற்றிறுடன் வேலை வாய்ப்பு அலுவலகம் வந்து அதற்கான விண்ணப்பத்தை பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பம் காலை 10 மணி முதல் 1 மணி வரை இலவசமாக வழங்கப்படும்.

ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

விண்ணப்பித்த அனைவருக்கும் தகுதி அடிப்படையில் 3 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.150, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மாதம் ரூ.200, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.300 வழங்கப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் தினமும் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை அலுவலக வேலை நாட்களில் பெறப்படும்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Saturday, June 30, 2007

இந்திய விமானப்படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய விமானப்படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய விமானப் படையில் குருப் "ஒய்' பணியில் சேர விரும்புபவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது பற்றி கடலூர் கலெக்டர் ராஜேந்திர ரத்னு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

இந்திய விமானப்படையில் குருப் "ஒய்' பணிக்கு ஆட் சேர்ப்பு செய்யப்படவுள்ளது. இதற்கான

கல்வித் தகுதி 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு படித்து அறிவியல் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்.

வயது வரம்பு 01.01.1987ம் தேதி, 28.02.1991ம் தேதிககுள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

உடல் தகுதியில் 152.5 செ.மீட்டர் உயரமும், 5 செ.மீட்டர் மார்பளவு விரிய வேண்டும். கண் பார்வை 6/36 இருக்க வேண்டும். கண்ணாடி அணிந்திருக்கக் கூடாது.

இந்த தகுதிகள் உள்ள இளைஞர்கள் வரும் ஜூலை 16ம் தேதிக்குள் , தலைவர், சென்ட்ரல் எர்மென் செக்ஷன் போர்டு, தபால் பெட்டி எண் : 11807, டில்லி என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, June 20, 2007

நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலுர் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


கடலுர்:கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து கடலுர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மிருணாளினி விடுத் துள்ள செய்திக் குறிப்பு:


கடலுரில் டாக்டர் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி விடுமுறை நாட்களில் நடக்கிறது. பயிற்சியில் அடிப்படை உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, சுத்த தங்கம் நகைகளின் வகைகளை கண்டறிதல், வங்கிகளில் நகைக்கடன் வழங்கும் முறை, ஹால் மார்க்கிங், அடகு பிடிப்போர் நடைமுறை சட்டம் மற்றும் விதிகள் குறித்து 40 மணி நேர வகுப்பறை பயிற்சியும், நகை செய்யும் பயிற்சி 30 மணி நேரமும், உரைக்கல் முறையில் நகை தரம் பார்க்கும் செய்முறை பயிற்சி 30 மணி நேரம் உள்பட 100 மணி நேர பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சியின் முடிவில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும்.
விடுமுறை நாட்களில் நடக்கும் இந்த பயிற்சியில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். 18 வயதிற்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண்கள் எந்த பகுதியை சேர்ந்தவராகவும் இருக்கலாம்.
தற்போது படித்து வரும் கல்விக்கு இடையூறு இல்லாமல் தங்கள் தகுதியினை உயர்த்திக்கொள்ளலாம்.
வரும் ஜூலை மாதம் துவங்கும் பயிற்சியில் சேர விரும்புவோர் டாக்டர் எம்.ஜி. ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேரில் வந்து ரூ.50 செலுத்தி விண்ணப்பம் பெற்று பயிற்சி கட்டணமாக ரூ. 2 ஆயிரத்து 500 செலுத்தி சேர்ந்து கொள்ளலாம்.

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், கூட்டுறவு வங்கிகள் நிறுவனங்களில், பணிபுரிபவர்கள், வங்கி, சங்க செலவிலேயே பயிற்சி பெறலாம்.
மேலும் விபரங்கள் வேண்டுவோர் முதல்வர் டாக்டர் எம்.ஜி. ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையம், 1 ஏ. அப்பாவுத் தெரு, புதுப்பாளையம், கடலுர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

சிறப்பாக தொண்டு புரிந்ததற்கு வழங்கும் விருது பெற கடலுõர் மாவட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு

சிறப்பாக தொண்டு புரிந்ததற்கு வழங்கும் விருது பெற கடலுர் மாவட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலுர்: சமூக நலனில் சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் இளைஞர்களுக்குக்கான விருதுக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் வரும் 30ம் தேதிக்குள் கொடுக்கப்பட வேண்டும்.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 12ம் தேதி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி மத்திய அரசால் சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்காகன பணிகளை சிறப்பாக செய்து வரும் இளைஞர்களுக்கு (15 வயது முதல் 35 வயது வரை) மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கு தேசிய இளைஞர் விருது வழங்கப்படுகிறது. 1.4.2006 முதல் 31.3.2007 வரையிலான காலத்திற்கு செய்த இளைஞர் நலப்பணிகளுக்கான விருதுகள் இந்த நிதியாண்டில் வழங்கப்பட உள்ளது.

இளைஞர் தனி நபர் பிரிவில் தன்னார்வ அடிப்படையில் நிதி ஆதாயம் பெறப்படாமல் தொண்டு செய்திருக்க வேண்டும்.
தன்னார்வ தொண்டு நிறுவனம் சங்க பதிவு சட்டத்தின்படி பதிவு செய்திருக்க வேண்டும்.
நிர்வாக குழுவின் அதிகாரங்கள் அமைப்பு விதிகளில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
எவ்வித லாப நோக்கத்துடனும் தொண்டு பணிகள் செய்திருக்கக் கூடாது.
சமுதாய நலப்பணிகளில் தொண்டாற்றிய புகைப்படம் மற்றும் செய்திக்குறிப்பு, இதர ஆவணங்களுடன் சான்றொப்பம் இட்ட ஆதாரங்கள் இணைக்க வேண்டும்.
தனி நபர் விருதுக்கு தேர்வு பெறுபவருக்கு ரூ.20 ஆயிரத்திற்கான ரொக்கப் பட்டயம், பதக்கம் 25 பேருக்கும் வழங்கப்படும்.
தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு ரூ. ஒரு லட்சம் ரொக்கம், பட்டயம், வெற்றிச் சின்னம் வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து 3 நகல்களுடன் கருத்துக்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் 30ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

Thursday, June 14, 2007

ஹஜ் விண்ணப்பங்கள் வினியோகம்

இந்த ஆண்டுக்கான ஹஜ் விண்ணப்பங்கள் வினியோகம்

இந்த ஆண்டுக்கான ஹஜ் விண்ணப்பங்கள் வினியோகம் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உச்சவரம்பு நிர்ணயிப்பு
மாநில ஹஜ் குழுக்களுக்கு வழங்கப்படும் ஹஜ் விண்ணப்பங்களுக்கான உச்சவரம்பினை மும்பை மத்திய ஹஜ் குழு நிர்ணயித்துள்ளது. அச்சடிக்கப்பட்ட அறிவுரைகளுடன், 2007-ம் ஆண்டுக்கான ஹஜ் விண்ணப்பம் ஒன்றினை ரூ.100-க்கான பணக் கொடுப்பாணை (பே ஆர்டர்) அல்லது கேட்பு காசோலை (டிமான்ட் டிராப்ட்) அளித்து பெற்றுக் கொள்ளலாம். இத்தொகை தங்களின் விண்ணப்பங்களை அன்னியச் செலாவணித் தொகையுடன் சமர்ப்பிக்கும்போது சரிசெய்யப்படும்.
ஹஜ்-2007-க்கான ஹஜ் விண்ணப்பப் படிவங்களை இணையதளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம் என்று மும்பை மத்திய ஹஜ் குழு தெரிவித்துள்ளது. இணையதளம் மூலம் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களையும் சம்பந்தப்பட்ட மாநில ஹஜ் குழுக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இணையதளம் மூலம்...
எனவே, ஹஜ் 2007-க்கான அறிவுரைகளுடன் கூடிய விண்ணப்பங்களை www.hajcommittee.com என்ற இணையதள முகவரி மூலம் பெறும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நேரடியாக, மாநில ஹஜ் குழு அல்லது இணையதளம் மூலம் பெறப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தமிழ்நாடு மாநில ஹஜ் குழு பெயரில் அன்னியச் செலாவணி முன்பணம் ரூ.10,700-உடன் அனுப்பவேண்டிய கடைசி தேதி 30.6.2007 ஆகும். அதற்கு முன்னரே மனுக்களை அனுப்பி ஏமாற்றத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.