]]

Sunday, June 17, 2007

விமானப்படைக்கு ஆள்தேர்வு

கோவையில் ஜுலை 14-ல் விமானப்படைக்கு ஆள் தேர்வு தமிழகம், புதுச்சேரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்


விமானப்படையில் சேருவதற்கான ஆள்தேர்வு வரும் ஜுலை 14-ந் தேதி கோயம்புத்தூரில் நடைபெறுகிறது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம்.
இது தொடர்பாக பத்திரிக்கை தகவல் மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோவையில் வரும் 14-ந் தேதி விமானப்படையின் ``ஏர் வாரியர்'' பணிக்கான ஆள்தேர்வு நடக்கிறது. அங்கீகாரம் பெற்ற அரசு நிறுவனத்தில் இன்டர்மீடியேட் அல்லது பிளஸ் டூவில் கணிதம், இயற்பியல் ஆங்கிலம் ஆகிய பாடங்களுடன் தேர்ச்சி அல்லது டிப்ளமோ (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்ட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த, 1986-ம் ஆண்டு ஜுலை 1-ந் தேதி மற்றும் 1990-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி ஆகியவற்றுக்கு இடையே பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்புவோர், கோவை சூலூரில் உள்ள மெயின் கார்டு ரூமுக்கு ஜுலை 14-ந் தேதி காலை 7 மணியில் இருந்து 10 மணிக்குள் வரவேண்டும். வரும்போது, கல்விச்சான்றுகள் (என்.சி.சி. இருந்தால் கொண்டு வரவேண்டும்), அனைத்து கல்வி சான்றிதழ்களின் 3 நகல்கள், இருப்பிட சான்று (இருந்தால் மட்டும்), சமீபத்தில் எடுக்கப்பட்ட 7 பாஸ்போர்ட் கலர் புகைப்படங்கள் (தொப்பி அணியாமல்), 2 நீளமான உறைகள் மற்றும் உடல் தகுதி தேர்வுக்கு தேவையான உடை மற்றும் உபகரணங்கள் (ஸ்போர்ட்ஸ் கிட்) ஆகியவற்றை கொண்டுவரவேண்டும்.
மேலும், விவரங்களுக்கு கமாண்டிங் ஆபீசர், 8, ஏர்மென் செலக்ஷன் சென்டர், ஏர்போர்ஸ், தாம்பரம், சென்னை என்ற முகவரியை (தொலைபேசி-044-22395553 நீட்டிப்பு-3359) தொடர்பு கொள்ளலாம். கோவைக்கு வரும்போது விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments: