]]

Sunday, July 22, 2007

பரங்கிப்பேட்டை அன்னங்கோயிலில் மீன்பிடி துறைமுகம் கட்டித் தர கோரிக்கை

பரங்கிப்பேட்டை அன்னங்கோயிலில் மீன்பிடி துறைமுகம் கட்டித் தர கோரிக்கை


பரங்கிப்பேட்டை அருகே அன்னங்கோயில் பகுதியில் மீனவர்கள் நலனை கருத்தில் கொண்டு மீன்பிடி துறைமுகம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


பரங்கிப்பேட்டையில் ஏராளமான கடற்கரை மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் கடலில் பிடிக்கும் மீன்களை அன்னங் கோயில் பகுதிக்கு கொண்டு வந்து அங்குள்ள வியாபாரிகளிடம் கொடுக்கின்றனர்.

அந்த மீன்கள் கெட்டு போகாதாவறு பதப்படுத்தி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கனரக வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.

இதனால் அன்னங் கோயில் பகுதி வளர்ச்சியடைந்து வரும் பகுதியாக உள்ளது. ஆனால் இங்கு இதுவரை மீன்பிடி துறைமுகம் இல்லை. இது குறித்து பலமுறை மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த சுனாமியின் போது இந்த பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட வந்த அதிகாரிகளிடம் மீன்பிடி துறைமுகம் கட்டித் தரக் கோரி மீனவர்கள் கோரிக்கை விடுத்தபோது ஆசிய வங்கி நிதியுதவியுடன் கட்டித்தர ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

ஆனால் இதுவரை மீன்பிடி துறைமுகம் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மீனவர்கள் பயன்பெறும் வகையில் அன்னங்கோயில் பகுதியில் விரைவில் மீன்பிடி துறைமுகம் கட்டித் தர ஏற்பாடு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments: