]]

Wednesday, August 29, 2007

பி.ஐ.டி.இ., மண்டல அலுவலகம் திறப்பு

சென்னை பல்கலையில் பி.ஐ.டி.இ., மண்டல அலுவலகம் திறப்பு

சென்னை பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி மையத்தில் பிரிட்டிஷ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் இகாமர்சின் மண்டல அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.


பிரிட்டிஷ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் இ-காமர்ஸ் கல்வி நிறுவனத்தில் (பி.ஐ.டி.இ.,) எம்.எஸ்.சி., நவீன தொழில்நுட்பம், எம்.பி.ஏ., நவீன நிர்வாகம், எம்.பி.ஏ., மருத்துவ மேலாண்மை உள்ளிட்ட ஒரு வருட முதுநிலை பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் பி.ஐ.டி.இ., மற்றும் சென்னை பல்கலைக் கழகம் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. இதையடுத்து பி.ஐ.டி.இ., மண்டல அலுவலகம் சென்னை பல்கலைக் கழகத்தில் திறக்கப்பட்டுள்ளது.

இம்மையத்தை சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். பி.ஐ.டி.இ., கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் சேர்வதற்கும், விசா மற்றும் வங்கிக் கடன் பெறுவதற்கும் சென்னை பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி மையத்தில் உள்ள பி.ஐ.டி.இ., மண்டல அலுவலகம் உதவும்.

துணைவேந்தர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், 'சென்னை பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி மையத்தின் மூலமாக சேரும் மாணவர்களுக்கு பி.ஐ.டி.இ., முதுநிலை பட்டப் படிப்பில் 45 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும்' என்றார்.

பி.ஐ.டி.இ., முதல்வர் மொகமது பர்மர், சென்னை பல்கலைக் கழக பதிவாளர் ரங்கநாதம், தொலைதூரக் கல்வி மையத்தின் இயக்குனர் மோகன்ராம், பிரிட்டிஷ் கவுன்சில் துணைத்தலைவர் கர்தார் சிங் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

0 comments: