]]

Friday, August 31, 2007

மாணவ-மாணவிகள் இங்கிலாந்தில் படிப்பதற்கான தகவல் மையம்

மாணவ-மாணவிகள் இங்கிலாந்தில் படிப்பதற்கான தகவல் மையம்

சென்னை பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டது

மாணவ-மாணவிகள் நலன் கருதி, இங்கிலாந்தில் படிப்பதற்கான தகவல் மையம் சென்னை பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தை துணைவேந்தர் ராமச்சந்திரன் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை பல்கலைக்கழக அஞ்சல்வழி கல்வி நிறுவனமும் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரிட்டிஷ் இன்ஸ்டிடிïட் ஆப் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனமும் அண்மையில் ஒரு ஒப்பந்தம் செய்தன. அந்த ஒப்பந்தத்தின்படி, இங்கிலாந்து கல்வி நிறுவனத்தின் மண்டல அலுவலகத்தை திறந்து அதன்மூலம் மாணவர்களின் படிப்புக்கு தேவையான தகவல்களை வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்த புதிய மையம் சேப்பாக்கத்தில் உள்ள பல்கலைக்கழக அஞ்சல்வழிக்கல்வி நிறுவன கட்டிடத்தின் 2-வது மாடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்து கல்வி நிறுவனத்தில் உள்ள பல்வேறு படிப்புகள், மாணவர் சேர்க்கை முறை, கட்டண விவரம், கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு, விசா நடைமுறை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் மாணவ-மாணவிகள் எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த மையத்தை சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.ராமச்சந்திரன் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் எம்.ரெங்கநாதம், அஞ்சல்வழிக்கல்வி இயக்குனர் ஜி.மோகன்ராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து இங்கிலாந்தில் உள்ள உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றிய வழிகாட்டி கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கையும் துணைவேந்தர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில் இங்கிலாந்து செல்வதற்கான விசா நடைமுறைகள் குறித்து சென்னையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் துணைத்தலைவர் கர்த்தார் சிங் விளக்கிக் கூறினார்.

வெளிநாட்டில் படிக்க தேவையான அடிப்படை விஷயங்கள், வெவ்வேறு படிப்புகள், அவற்றுக்கான அட்மிஷன் முறை, கல்வி கட்டணம், வங்கிக்கடன் உதவி, வேலைவாய்ப்புகள் பற்றி பிரிட்டிஷ் இன்ஸ்டிடியூப் ஆப் டெக்னாலஜி இயக்குனர் முகமது பார்மர் உரையாற்றினார். இந்த கருத்தரங்கில் ஏராளாமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த வழிகாட்டி கருத்தரங்கம் இன்றும், நாளையும் நடக்கிறது.

0 comments: