]]

Sunday, September 2, 2007

வெள்ளாற்று பாலத்தை விரைவில் கட்டி முடிக்க வேண்டும்


பரங்கிப்பேட்டை - கிள்ளையை இணைக்கும் வெள்ளாற்று பாலத்தை விரைவில் கட்டி முடிக்க வேண்டும்


ம.தி.மு.க.கோரிக்கை


பரங்கிப்பேட்டை - கிள்ளையை இணைக்கும் வகையில் வெள்ளாற்று பாலத்தை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.


இது தொடர்பாக ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜீ என்கிற ராமதாஸ் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-


கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டைக்கும் கிள்ளைக்கும் இடையே வெள்ளாறு உள்ளது. இந்த வெள்ளாறு கிள்ளை பேரூராட்சிக்கும், பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கும் மையப்பகுதியில் உள்ளது.


பரங்கிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் சுமார் 50 கிராமங்களும், கிள்ளை பேரூராட்சியில் 50 கிராமங்களும் உள்ளது.


இந்நிலையில் பரங்கிப்பேட்டையில் இருந்து கிள்ளைக்கும், கிள்ளையில் இருந்தும் பரங்கிப்பேட்டைக்கும் படகு மூலமாக தான் செல்ல வேண்டும்.


மழைக்காலங்களில் படகுகள் செல்ல முடியாது. மழை நீர் வெள்ளாற்றில் கரைபுரண்டு ஓடும். இதனால் படகுகள் கவிழ்ந்துவிடும் என்று படகுகள் நிறுத்தி வைக்கப்படும்.


இதன் காரணமாக கிள்ளையில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு செல்ல வண்டிகேட் வழியாக புவனகிரியை சுற்றி செல்ல வேண்டும். அதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் ஆகும்.


இதனை கருத்தில் கொண்டு பரங்கிப்பேட்டை - கிள்ளையை இணைக்கும் வகையில் பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை வைத்தனர்.


அதன்படி பாலத்தை கட்ட உலக வங்கி ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது. பணி தொடங்க டெண்டரும் விடப்பட்டுள்ளது.


இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் டெண்டர் விடப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தொடங்க வில்லை.


இதனால் பொதுமக்கள் பரங்கிப்பேட்டை - கிள்ளைக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.


எனவே, பரங்கிப்பேட்டை - கிள்ளை பகுதி களில் 200 கிராம மக்களின் நலன்கருதி வெள்ளாற்று பாலத்தை துரிதமாக முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments: