கிராம சபைக் கூட்டம் நடத்த கலெக்டர் உத்தரவு
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தியையொட்டி வரும் 2ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கலெக்டர் ராஜேந்திர ரத்னு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
காந்தி ஜெயந்தியையொட்டி வரும் 2ம் தேதி கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடத்த வேண்டும்.
கூட்டத்தில் 2006-07ம் ஆண்டிற்கான ஊராட்சியின் தணிக்கை அறிக்கையை முக்கிய அம்சங்கள் மற்றும் தணிக்கை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள குறைபாடுகள் மற்றும் முழு சுகாதார திட்டத்தின் கீழ் நிர்மல் கிராம புரஸ்கார் விருது பெற ஊராட்சி மேற்கொண்ட நடவடிக்கை விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்பது உட்பட பல பொருள்கள் குறித்து விவாதிக்க வேண்டும்.
ஊராட்சி மன்றத்தில் பணிபுரியும் உதவியாளர்கள் கிராம சபைக் கூட்டத்தில் பொது மக்கள் அதிகளவில் பங்கேற்க அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment