]]
Showing posts with label சீனியாரிட்டி. Show all posts
Showing posts with label சீனியாரிட்டி. Show all posts

Wednesday, August 29, 2007

பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 2-ம் கட்டமாக பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு

சலுகை மூலம் பதிவுமூப்பை புதுப்பித்தவர்களுக்கும் வாய்ப்பு

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 2-ம் கட்டமாக பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், அரசு அளித்த சலுகை மூலம் விடுபட்ட பதிவு மூப்பை (சீனியாரிட்டி) புதுப்பித்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 7 ஆயிரத்து 979 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துள்ள பட்டதாரி ஆசிரியர்களின் பதிவு மூப்பு கேட்கப்பட்டு தகுதியானவர்களின் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டன.


ஆனால், 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை பதிவுமூப்பை புதுப்பிக்க தவறி பின்னர் வெவ்வேறு காலகட்டங்களில் அரசு அறிவித்த சலுகை மூலம் பதிவை புதுப்பித்துக்கொண்டவர்கள் சீனியாரிட்டி பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு 5 ஆயிரத்து 98 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு விரைவில் பணிநியமன உத்தரவு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

பதிவு மூப்பு தகுதி பெற்றிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் ஏற்கனவே அரசு பணியில் இருந்ததால் அவர்கள் தேர்வு செய்யப்படவில்லை.

இதனால் அறிவிக்கப்பட்ட பணி இடங்களில் 2 ஆயிரத்து 881 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப 2-ம் கட்ட சீனியாரிட்டி பட்டியல் வேலைவாய்ப்பு பயிற்சித்துறையிடம் கேட்கப்பட்டு உள்ளது.

அரசு அறிவித்த சலுகை மூலம் விடுபட்ட வேலைவாய்ப்பு பதிவுமூப்பை புதுப்பித்தவர்கள் இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று வேலைவாய்ப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 2-ம் கட்டமாக பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு

சலுகை மூலம் பதிவுமூப்பை புதுப்பித்தவர்களுக்கும் வாய்ப்பு

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 2-ம் கட்டமாக பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், அரசு அளித்த சலுகை மூலம் விடுபட்ட பதிவு மூப்பை (சீனியாரிட்டி) புதுப்பித்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 7 ஆயிரத்து 979 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துள்ள பட்டதாரி ஆசிரியர்களின் பதிவு மூப்பு கேட்கப்பட்டு தகுதியானவர்களின் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டன.


ஆனால், 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை பதிவுமூப்பை புதுப்பிக்க தவறி பின்னர் வெவ்வேறு காலகட்டங்களில் அரசு அறிவித்த சலுகை மூலம் பதிவை புதுப்பித்துக்கொண்டவர்கள் சீனியாரிட்டி பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு 5 ஆயிரத்து 98 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு விரைவில் பணிநியமன உத்தரவு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

பதிவு மூப்பு தகுதி பெற்றிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் ஏற்கனவே அரசு பணியில் இருந்ததால் அவர்கள் தேர்வு செய்யப்படவில்லை.

இதனால் அறிவிக்கப்பட்ட பணி இடங்களில் 2 ஆயிரத்து 881 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப 2-ம் கட்ட சீனியாரிட்டி பட்டியல் வேலைவாய்ப்பு பயிற்சித்துறையிடம் கேட்கப்பட்டு உள்ளது.

அரசு அறிவித்த சலுகை மூலம் விடுபட்ட வேலைவாய்ப்பு பதிவுமூப்பை புதுப்பித்தவர்கள் இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று வேலைவாய்ப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Monday, August 20, 2007

6,102 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

வேலை வாய்ப்பக சீனியாரிட்டிப்படி 6,102 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்
- கல்வி அமைச்சர் தகவல்

"இந்த கல்வியாண்டில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியான 6 ஆயிரத்து 102 ஆசிரியர் பணியிடங்கள் 1:1 என்ற அடிப்படையில் வேலை வாய்ப்பு அலுவலக முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும்'' என்று கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலமாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்புகள் வரை தேவை அடிப்படையில் 7 ஆயிரத்து 979 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

வேலை வாய்ப்பக பதிவு முன்னுரிமை அடிப்படையில் 1:1 என்ற அடிப்படையில் தேர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நேர்முகத் தேர்வுக்கு வந்த 5 ஆயிரத்து 98 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களுக்கு முதல்வர் கருணாநிதியால் விரைவில் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், மீதமுள்ள 2 ஆயிரத்து 881 பணியிடங்களுக்கு ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த கல்வியாண்டில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 ஆயிரத்து 102 பணியிடங்கள் காலி ஏற்பட்டன. இப்பணியிடங்களில் பதவி உயர்வு அளித்த பின்னர் மீதமுள்ளவைகளக்கு 1:1 என்ற விகிதாச்சாரப்படி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து முன்னுரிமை அடிப்படையில் பட்டியல் பெற்று நிரப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடக்கக் கல்வியில் ஏற்பட்டுள்ள 2 ஆயிரத்து 683 பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் இதே முறையில் நிரப்பப்படும்.

7 ஆயிரத்து 223 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து முன்னுரிமை அடிப்படையில் பட்டியல் பெற்று மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களால் நியமன உத்தரவுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.