]]
Showing posts with label சுற்றுலாத் துறை. Show all posts
Showing posts with label சுற்றுலாத் துறை. Show all posts

Monday, September 17, 2007

நாணயக் கண்காட்சி

நாணயக் கண்காட்சி : 27ல் துவக்கம்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மூன்று நாள் நாணயக் கண்காட்சி நடத்த தொண்டை மண்டல நாணயவியல் கழகம் முடிவு செய்துள்ளது.

தொண்டை மண்டல நாணயவியல் கழகத்தின் சிறப்பு பேரவைக் கூட்டம் முதலியார்பேட்டை அலுவலகத்தில் நடந்தது. நிறுவனத் தலைவர் கோபிராமன் தலைமை தாங்கினார். செயலாளர் தியாகி முத்து சுந்தரமூர்த்தி வரவேற்றார்.

கூட்டத்தில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு புதுச்சேரி சுற்றுலாத் துறையின் ஆதரவுடன், அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் வரும் 27ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை மூன்று நாட்கள் நாணயக் கண்காட்சி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

பொதுமக்கள், மாணவர்கள் தாங்கள் சேகரித்து வைத்துள்ள அரிய வகை நாணயங்கள், பணத் தாள்கள், கலைப்பொருட்கள் போன்றவற்றை இந்தக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கலாம்.

பங்கு பெறும் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படும்.

கண்காட்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், எண். 24, பாரதி மில் வீதி, முதலியார் பேட்டை, புதுச்சேரி 4 என்ற முகவரியில் முன்கூட்டியே தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு 0413 2356110 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

Wednesday, July 4, 2007

வழிகாட்டிகளுக்கான (கைடு) சிறப்பு பயிற்சி - சுற்றுலாத் துறையில் 400 பேருக்கு வேலைவாய்ப்பு

வழிகாட்டிகளுக்கான (கைடு) சிறப்பு பயிற்சி
சுற்றுலாத் துறையில் 400 பேருக்கு வேலைவாய்ப்பு


சுற்றுலாத்துறையில் சுய வேலைவாய்ப்பு அடிப்படையில், 400 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய வகையில், சுற்றுலா வழிகாட்டிகளுக்கான சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் மூ.ராஜாராம் தெரிவித்தார்.

இது பற்றி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக இயக்குநரும், நிர்வாக இயக்குநருமான மூ.ராஜாராம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சுற்றுலாச் செல்வங்கள்


தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்கள், அழகிய கடற்கரைகள், வனவிலங்கு சரணாலயங்கள், அழகிய நீர்வீழ்ச்சிகள், மலைப்பிரதேசங்கள் ஆகிய சுற்றுலா செல்வங்களைக் காண ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.

2006-ம் ஆண்டில் 3 கோடியே 92 லட்சத்து 14 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 13 லட்சத்து 35 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் தமிழ்நாட்டுக்கு வந்து சென்றுள்ளனர்.

அன்னிய செலாவணி

உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டில் தங்கிச் செல்லும் கால அளவு சராசரியாக 4 நாட்களில் இருந்து 5 நாட்கள் ஆகும். வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 7 நாட்கள் வரை தங்கிச் செல்கிறார்கள். இவ்வாறு தங்கிச் செல்லும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் செலவிடும் தொகை நாள் ஒன்றுக்கு 711 ரூபாய். வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் செலவிடும் தொகை 2 ஆயிரத்து 252 ரூபாய். இதன் மூலம் தமிழ்நாடு 2006-ம் ஆண்டில், அந்நியச் செலாவணிக்கு 3 ஆயிரத் 20 கோடி ரூபாய் பங்களித்து உள்ளது.


இந்த நிலையில் சுற்றுலாப் பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சரியான தகவல்களை எடுத்துக் கூற போதுமான அளவில் தற்போது சுற்றுலா வழிகாட்டிகள் இல்லை.


400 பேருக்கு வேலைவாய்ப்பு

எனவே, 400 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.


இதன்படி, முதல்கட்டமாக 184 பேருக்கு சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையம் மூலம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் முக்கிய சுற்றுலாப் பகுதிகளான சென்னை, மாமல்லபுரம், மதுரை, கன்னியாகுமரி, உதகமண்டலம், தஞ்சாவூர் சுற்றுலா வழிகாட்டிகளாக செயல்படுவார்கள். (சுய வேலைவாய்ப்பு அடிப்படையில்)


பயிற்சி


முதல்கட்ட பயிற்சி 34 பேர்களுக்கு 11-7-2007 அன்று சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மைநிலைய கூட்ட அரங்கில் சுற்றுலாத் துறை அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.


பயிற்சி காலம் 10 நாட்கள். இத்துடன் களப்பணி 3 நாட்கள். இதற்கு பிறகு மதுரை, தஞ்சாவூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் சுற்றுலா வழிகாட்டி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு...

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்,

2, வாலாஜா சாலை,
சென்னை-600 002
தொலைபேசி எண்கள் 25383333, 25384444, 25389857.

மேற்கண்டவாறு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் மூ.ராஜாராம் கூறி உள்ளார்.

Wednesday, June 20, 2007

சுற்றுலாத் துறையில் வேலை - ஊனமுற்றோருக்கு இலவச பயிற்சி

சுற்றுலாத் துறையில் வேலை - ஊனமுற்றோருக்கு இலவச பயிற்சி


கோவை : சுற்றுலாத் துறையில் ஊனமுற்றோர், அரவானிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் வளர்ந்தவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வேலைவாய்ப்பும் பெற்றுத் தர மதுரா டிராவல் சர்வீஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.


இது பற்றி அதன் இணைப்பாளர் ராதா வெளியிட்ட செய்தி:

இப் பயிற்சியில் கடவுச்சீட்டு, விசா, காப்புறுதி, மருத்துவக் காப்பீடு, குடிபெயர்தல், குடியேறுதல், கடன் அட்டை, கணக்கு அட்டை, அம்மைகுத்தல், அடிப்படை கணினி, பணம் மாற்றல், வெளிநாட்டிலிருந்து பணத்தை பெறுதல், கணினி முன்பதிவு முறை, வானூர்தி, கப்பல், ரயில், பஸ், சுற்றுலா வாகனம், சுற்றுலா வழிகாட்டுதல், ஷாப்பிங், விடுதி முன்பதிவு, தன்னியக்கம், மக்கள் தொடர்பு, செய்தித் தொடர்பு ஆகியவை அடங்கும்.
இப் பயிற்சிக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. பயிற்சி காலம் மூன்று மாதங்கள். தினமும் ஒரு மணி நேரம். மொத்தம் 60 வகுப்புகள். ஒவ்வொரு வகுப்பிலும் 20 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவீர்கள். பயிற்சி வகுப்புகள் ஜூலை மாதம் முதல் தொடங்கும். முதல்கட்ட நேர்காணலில் தேர்வு செய்யப்படுபவர்கள் மட்டுமே இப் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
இப் பயிற்சி பெறுபவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு உத்திரவாதம். இதற்கான அடிப்படை கல்வித் தகுதி 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மதுரா டிராவல் சர்வீஸ் (பி) நிறுவனம், 11/3, காந்தி இர்வின் ரோடு, எழும்பூர், சென்னை-600 008 (ரயில் நிலையம் எதிரில்). தொலைபேசி எண்கள்- 28192002, 28192970.