]]
Showing posts with label பெண். Show all posts
Showing posts with label பெண். Show all posts

Tuesday, February 22, 2011

பரங்கிப்பேட்டையில் மார்க்கக் கல்வி பயிலும் பெண்களுக்கு உதவித் தொகை

தகவல் உதவி: ஜமாஅத் குழுமம்

Saturday, September 22, 2007

பெண் கரு பாதுகாப்பு மாநில கருத்தரங்கம்

பெண் கரு பாதுகாப்பு மாநில கருத்தரங்கம்

சென்னையில் 'பெண் கரு பாதுகாப்பு' குறித்த மாநில கருத்தரங்கம் வரும் 30ம் தேதி நடக்கிறது.

பெண் சிசு கொலைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்த ஆலேசானைக் கூட்டம் சமூல நல வாரிய அலுவலகத்தில் நடந்தது.

சமூக நல வாரியத் தலைவர் கவிஞர் சல்மா தலைமை வகித்தார்.

சென்னை கலெக்டர் ஜெயா வரவேற்றார். 'காசா' அமைப்பின் ஆலோசகர் பவளம், கல்வித்துறை கூடுதல் இயக்குனர் சரோஜினி, பெண் வக்கீல்கள் சங்கத் தலைவர் சாந்தகுமாரி, போலீஸ் துணை கமிஷனர் விஜயகுமாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


பெண் சிசுக்கொலை கவலை அளிப்பதாகவும், இவற்றை முற்றிலும் கட்டுப்படுத்த பொதுமக்களிடையே மீடியாக்கள் உதவியோடு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவித்தனர்.

வரும் 30ம் தேதி சமூக நல வாரியம் சார்பில் 'பெண் கரு பாதுகாப்பு' குறித்த மாநில கருத்தரங்கை சென்னையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இதில் தன்னார்வ அமைப்புக்கள், சட்டத் துறையினர், மருத்துவ துறையினர், காவல் துறையினர், மாணவர்கள் பங்கேற்றனர்.

Friday, September 7, 2007

சமூக நல வாரிய கட்டுரை போட்டி

கட்டுரை போட்டி

சமூக நல வாரியம் சார்பில் 'பெண் கருக்கொலை' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடக்கிறது.

தமிழ்நாடு சமூக நல வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெண்கள் சமத்துவத்தை உணர்த்தும் பொருட்டு தமிழ்நாடு சமூக நல வாரியம் சார்பில் 'பெண் கருக்கொலை' தொடர்பான கருத்தரங்கு செப்டம்பர் மாத இறுதியில் நடக்கிறது.

கருத்தரங்கிற்கான கட்டுரைப் போட்டி இங்கு நடக்க உள்ளது. 'பெண் கருக்கொலை' என்ற பெயரில் நடக்கும் கட்டுரைப் போட்டியில் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

இதற்கு முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக ஐந்தாயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக மூன்றாயிரம் ரூபாயும், ஆறுதல் பரிசாக 10 பேருக்கு தலா ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

கட்டுரைகள் 8 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கட்டுரைகள் வரும் 14ம் தேதிக்குள் தலைவர், தமிழ்நாடு சமூக நல வாரியம், 21 அப்துல்ரசாக் தெரு, சைதாப்பேட்டை, சென்னை-15. என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.