]]
Showing posts with label போட்டி. Show all posts
Showing posts with label போட்டி. Show all posts

Tuesday, June 8, 2010

பரங்கிப்பேட்டை மாநகரில் முப்பெரும் விழா!

ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா!
தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி!!

மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம்!!!


பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரியில் இந்த மாதம் 12 மற்றும் 13 தேதிகளில் முப்பெரும் விழா நடைபெற இருக்கின்றது இன்ஷா அல்லாஹ்....

12ந் தேதி சனிக்கிழமையன்று தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி காலை 9.00 மணி முதல் இஷா வரை நடைபெற இருக்கின்றது.

இப்போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அரபுக்கல்லூரிகள் மற்றும் ஹிஃப்ழு மதரஸாக்களில் கல்வி பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை நிரூபிக்க இருக்கின்றனர்.

இரண்டாம் நாள் 13 ந் தேதி (13.06.2010) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் லுஹர் வரை உலக அளவிலும், அகில இந்திய அளவிலும் நடத்தப்பட்ட கிராஅத் போட்டிகளில் பல பரிசுகளை வென்ற தலை சிறந்த காரீகளின் (காரீ: முறையாக திருக்குர்ஆனை ஓதக்கூடியவர்) மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம் முதல் முறையாக நடைபெற இருக்கின்றது.

பிற்பகல் 1:30 மணி முதல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரியில் திருக்குர்ஆனை முறையாக முழுவதுமாக மனனம் செய்து தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஹாஃபிழ் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கிராஅத் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெறும்.

மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் பெற்றுக் கொள்ளலாம்.








அல்லாஹ்வின் அருள்மறையை, அவனிக்கு வழிகாட்ட வந்த திருமறையை தேனினும் இனிய குரல்களில், உள்ளங்கள் உருகும் வகையில், நம்மை மெய்ச சிலிர்க்கும் முறையில் செவிகள் குளிர ஓதிக்காட்டப்படும் இந்த மாபெரும் கிராஅத் அரங்கிற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும், அல்லாஹ்வின் அருள்மழையில் நனைய வேண்டும் என்றும் போட்டிகளில் பங்குபெறும மாணவச் செல்வங்களின் திறமைகளை நேரில் காணவும், ஹாஃபிழ் பட்டம் பெறும் மாணவர்களுக்கு துஆ செய்யவும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி மற்றும் அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரி நிர்வாகிகள் அழைப்பு விடுக்கின்றனர்.

இந்த அழைப்பை தமிழறிந்த அனைத்து மக்களுக்கும் எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ள செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

தொடர்புக்கு:

முதல்வர்,
அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரி,
ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி,
மீராப்பள்ளித் தெரு, பரங்கிப்பேட்டை - 608502,
கடலூர் மாவட்டம்.
தொலைபேசி: (04144) 25 33 11

Thursday, May 20, 2010

பரங்கிப்பேட்டை மாநகரில் தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி & மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம்

கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக பரங்கிப்பேட்டை மாநகரில் தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி மற்றும் மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம்

கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கம் அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரியில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஜூன் மாதம் 12 ந் தேதி (12.06.2010) சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் நடைபெற இருக்கின்றது.

இப்போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அரபுக்கல்லூரிகள் மற்றும் ஹிஃப்ழு மதரஸாக்களில் கல்வி பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை நிரூபிக்க இருக்கின்றனர்.

இரண்டாம் நாள் 13 ந் தேதி (13.06.2010) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி உலக அளவிலும், அகில இந்திய அளவிலும் நடத்தப்பட்ட கிராஅத் போட்டிகளில் பல பரிசுகளை வென்ற தலை சிறந்த காரீகளின் (காரீ: முறையாக திருக்குர்ஆனை ஓதக்கூடியவர்) மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம் நடைபெற இருக்கின்றது.

மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விளம்பரத்தில் உள்ளன.



அல்லாஹ்வின் அருள்மறையை, அவனிக்கு வழிகாட்ட வந்த திருமறையை தேனினும் இனிய குரல்களில், உள்ளங்கள் உருகும் வகையில், நம்மை மெய்ச சிலிர்க்கும் முறையில் செவிகள் குளிர ஓதிக்காட்டப்படும் இந்த மாபெரும் கிராஅத் அரங்கிற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும், அல்லாஹ்வின் அருள்மழையில் நனைய வேண்டும் என்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி மற்றும் அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரி நிர்வாகிகள் அழைப்பு விடுக்கின்றனர்.

இந்த அழைப்பை தமிழறிந்த அனைத்து மக்களுக்கும் எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ள செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

Tuesday, January 26, 2010

உலகத்தமிழ் இணைய மாநாடு! கம்ப்யூட்டர் தமிழ் வரைபட போட்டி!!

செய்தி: தினமலர் இணைய நாளிதழ்

Wednesday, October 24, 2007

கடலூரில் அகில இந்திய கால்பந்து போட்டி

கடலூரில் அகில இந்திய கால்பந்து போட்டி
ஜனவரி மாதம் நடக்கிறது

கடலூரில் வருகிற ஜனவரி மாதம் அகில இந்திய கால்பந்து போட்டி நடக்கிறது.

கால்பந்து

'கடலூர் கால்பந்து அகடமி' என்ற விளையாட்டு பயிலரங்கம் கடலூரில் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் தலைவர் தி. கண்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடலூர் கால்பந்து அகடமி சிறந்த கால்பந்து வீரர்களை உருவாக்க பயிற்சி அளிக்கும்.

இதற்காக 12, 16 வயதுள்ள பள்ளி மாணவ மாணவிகளை தேர்ந்து எடுத்து பயிற்சி அளிக்கப்படும்.

குறிப்பாக கிராமபுற மாணவர்களுக்கு அகில இந்திய அளவில் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்.

முதல் கட்டமாக மாவட்ட, மாநில போட்டிகளை நடத்துவோம்.

அகில இந்திய போட்டி

இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களை கால்பந்து விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தும்.

வருகிற ஜனவரி மாதம் அகில இந்திய கால்பந்து போட்டியை நடத்த இருக்கிறோம்.

இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

இவ்வாறு கால்பந்து அகடமி தலைவர் கண்ணன் கூறினார். பேட்டியின்போது மாவட்ட விளையாட்டு அதிகாரி பத்மனாபன், செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Friday, September 7, 2007

இந்திய அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி

கடிதம் எழுதும் போட்டி

பள்ளி மாணவ, மாணவிகளிடையே கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்திய அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது.

முந்தைய தலைமுறையினரிடம் கடிதம் எழுதும் பழக்கம் பரவலாக காணப்பட்டதுடன், நேரு இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் புத்தகமாக வெளிவந்துள்ளன.

ஆனால், இணைய தளம் மற்றும் மொபைல் போன்களின் வளர்ச்சியால் கடிதம் எழுதும் பழக்கம் சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.

எனவே, இந்திய அஞ்சல் துறை சார்பில் பள்ளி மாணவர்களிடம் கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது.

இளநிலை (ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை) மாணவர்களுக்கு ஐந்து தலைப்புகளும்,

முதுநிலை (ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை) மாணவர்களுக்கு ஐந்து தலைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த தலைப்புகளில் மாணவர்கள் கடிதம் எழுதி அஞ்சல் துறைக்கு அனுப்ப வேண்டும்.

மாணவர்கள் 'இன்லேண்ட் லெட்டரில்' ஆங்கிலம் அல்லது தமிழில் கடிதங்களை எழுதி, 'இயக்குனர் (அஞ்சல் வணிகம்), முதல்தளம், கிரீம்ஸ் சாலை அஞ்சலகம், சென்னை 600 006' என்ற முகவரிக்கு இம்மாதம் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அனுப்புனர் முகவரி பகுதியில், மாணவர்கள் தங்களது பெயர், வகுப்பு, பிரிவு, பள்ளியின் பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

ஒரு மாணவர்கள் எத்தனை தலைப்புகளில் வேண்டுமானாலும் கடிதம் எழுதலாம்.

ஒவ்வொரு தலைப்பிற்கும் தனித்தனி கடிதத்தில் எழுத வேண்டும். இப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு எட்டு சைக்கிள்கள், நான்கு கீபோர்டு (இசைக்கருவி) மற்றும் நூற்றுக்கணக்கான ஆறுதல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

மேலும், விவரங்களுக்கு www.tamilnadupost.nic.in என்ற இணைய தளத்திலோ அல்லது 93828 14253, 93834 72266, 94444 86595 என்ற மொபைல் எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.