]]

Friday, June 15, 2007

சென்னை பல்கலையில் புத்தக கண்காட்சி

சென்னை பல்கலையில் புத்தக கண்காட்சி


சென்னை : சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஒரு மாதம் நடைபெறவுள்ள புத்தக கண்காட்சி நேற்று துவங்கியது. இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புத்தகங்கள் 50 சதவீத சலுகை விலையில் விற்கப்படுகின்றன.

சென்னைப் பல்கலைக் கழக பதிப்புத் துறை சார்பில் பல்கலைக் கழக 150வது ஆண்டை முன்னிட்டு நேற்று முதல் ஜூலை 16ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியை சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் எஸ்.ராமச்சந்திரன் நேற்று துவக்கி வைத்தார். கண்காட்சியில் இடம்பெறும் புத்தகங்கள் 50 சதவீத சலுகை விலையில் விற்கப்படுகின்றன. சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட 16 புத்தகங்கள் 35 சதவீத சலுகை விலையில் விற்கப்படுகின்றன. தமிழ் இலக்கியம், வரலாறு, பொருளாதாரம், இசை, அகழ்வாராய்ச்சி, சட்டம், திருக்குறள் ஆய்வுகள், தத்துவம், சமயம், அகராதிகள் என 241 புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இப்புத்தகக் கண்காட்சியை பல்வேறு மாணவர்களும், பொதுமக்களும் பார்வையிடுவதுடன், தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். ""சென்னைப் பல்கலைக் கழகத்தின் 150வது ஆண்டை முன்னிட்டு 150 புத்தகங்கள் வெளியிட முடிவு செய்யப்பட்டது. இவற்றில் 16 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வருகிற செப்டம்பர் மாதம் மேலும் 46 புத்தகங்கள் வெளியிடப்படவுள்ளன,'' என பல்கலைக் கழக துணைவேந்தர் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

0 comments: