இட ஒதுக்கீட்டால் பாதிப்பா?
நீதிபதி விளக்கம்
'பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு தலா 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதால், எந்த சமுதாயத்தினருக்கும் பாதிப்பு ஏற்படாது' என தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஜனார்த்தனம் தெரிவித்தார்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஜனார்த்தனம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
அரசியலமைப்பு சட்டத்தின் படி, சமுதாயம் மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோருக்கு தான் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.
விதி 45/94ன்படி பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முஸ்லிம்களில் 90 சதவீதம் பேரும், கிறிஸ்தவர்களில் 80 சதவீதம் பேரும் பிற்படுத்தப்பட்டவர்கள்.
பிற்படுத்தப்பட்ட இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஜனத்தொகை அடிப்படையில்தான் தற்போது இடஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில்தான் பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும், மீதமுள்ள 23 சதவீதம் பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால், எந்த சமுதாயத்தினருக்கும் பாதிப்பு ஏற்படாது.
ஆந்திராவில் முஸ்லிம் மைனாரிட்டி என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதால்தான், ஐகோர்ட் அதனை தடை செய்தது. இடஒதுக்கீடு வழங்குவதில் பொருளாதார பின்னணியை கருத்தில் கொள்ள முடியாது.
இவ்வாறு நீதிபதி ஜனார்த்தனம் கூறினார்.
0 comments:
Post a Comment