]]
Showing posts with label அண்ணா பல்கலை. Show all posts
Showing posts with label அண்ணா பல்கலை. Show all posts

Saturday, September 22, 2007

வேலைவாய்ப்பு முகாம்

குரோம்பேட்டை எம்.ஐ.டி.,யில் 23ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

அண்ணா பல்கலைக் கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கான மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாம் 23ம் தேதி குரோம்பேட்டை எம்.ஐ.டி.,யில் நடக்கிறது.


இது குறித்து அண்ணா பல்கலைக் கழகம் தொழிற்சாலை இணைப்பு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் 2007ம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் குரோம்பேட்டை எம்.ஐ.டி.,யில்(மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) 23ம் தேதி நடக்கிறது.

பி.ஜி.ஆர்., எனர்ஜி சிஸ்டம்ஸ் நிறுவனம் இந்த வேலைவாய்ப்பு முகாமில் மாணவர்களை பணிக்கு தேர்வு செய்யவுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் 2007ம் ஆண்டில் எம்.இ., எம்.டெக்., எம்.பி.ஏ., பட்டங்கள் பெற்ற மாணவர்கள் மட்டும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு, எம்.ஐ.டி.,யில் 23ம் தேதி காலை 9 மணிக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும்.

எழுத்துத் தேர்வின் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்பட்டு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்படும்.

இதன் அடிப்படையில் மாணவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விவரங்களை அண்ணா பல்கலைக் கழக இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, June 26, 2007

பிஎச்.டி., படிப்புக்கு நேர் காணல்

பிஎச்.டி., படிப்புக்கு 29ம் தேதி நேர் காணல்


கோவை அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான நேர்காணல் வரும் 29ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து கோவை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பிஎச்.டி., மற்றும் எம்.எஸ்., படிப்புகளுக்கு 533 பேர் 14 துறைகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களுக்கான நேர்காணல் நிகழ்ச்சி வரும் 29 மற்றும் 30ம் தேதி நடக்க உள்ளது.
இந்த விவரங்கள் www.annauniv.ac.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.