]]
Showing posts with label படிப்பு. Show all posts
Showing posts with label படிப்பு. Show all posts

Tuesday, August 28, 2007

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்... தொடர் 8

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்
Degree & Diploma Courses

S. ஆபிதீன் M.A., M.Sc., M.Phill., B.Ed.,

விரிவுரையாளர், விலங்கியல் துறை

செயலர்,முன்னாள் மாணவர் கழகம்
Dr. ஜாகிர் உசேன் கல்லூரி, இளையான்குடி.
Ilayangudi, Sivaganga District

E-mail: abideen245400@yahoo.com
Ph: 14564-245400/265252

---------------------------------------------------------------------------------------


ஏர் ஹோஸ்டஸ் ஆவது எப்படி?

ஏர்ஹோஸ்டஸ் என்றாலே தட்டில் சாக்லெட்டுகளையும் உணவுப் பதார்த்தங்களையும் தான் ஏந்தி வர வேண்டும் என்பதில்லை. அதற்கு மேலும் பல்வேறு பொறுப்புக்கள் உள்ளன.

விமானத்தில் பயணம் செய்வோருக்கு ஏற்படும் தலைவலியிலிருந்து பிரசவம் வரை முதலுதவி செய்ய ஏர்ஹோஸ்டஸ்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.

தகுதிகள்

இப்பணியில் சேர ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

பெண்களாக இருக்கும் பட்சத்தில் பணியில் சேரும் போது திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டும். பணியில் சேர்ந்த பின் திருமணம் செய்து கொள்ளலாம்.

வயது, உயரம், எடை ஆகிய மூன்றும் தேவையான விகிதத்தில் இருக்க வேண்டும்.

இந்தி சரளமாகப் பேச தெரிய வேண்டும். ஆங்கிலமும் தெரிய வேண்டும்.

கண் பார்வை 6ன் கீழ் 6 என்ற விகிதத்தில் இருத்தல் அவசியம்.

நிறக்குருடு (Colour Blindness) இருக்கக்கூடாது.

இனிமையான தோற்றம் தேவை.

விமானத்தின் அளவைப் பொருத்து ஏர்ஹோஸ்டஸ், பிளைட் பர்சரின் எண்ணிக்கை அமையும்.

பயிற்சி

தேர்வானவர்களுக்கு 6 வாரப் பயிற்சி அளிக்கப்படும்.

இதில் பயணிகளின் சைக்காலஜி, உணவு, தோற்றத்தை மேம்படுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் கற்றுக் கொடுக்கப்படும்.

உதாரணமாக விமானத்தில் விஐபிக்கள், முதியோர்கள், நோயாளிகள், குழந்தைகள் ஆகியோரிடத்தில் விமானப் பணிப்பெண்கள் சிறப்புக் கவனம் செலுத்துவது எப்படி என்பது போன்ற விஷயங்கள் பயிற்சியின் போதே கற்றுக் கொடுக்கப்பட்டுவிடும்.

பயணிகள் பாதுகாப்பாகப் பயணம் செய்வதை உறுதி செய்வதுதான் விமானப்பணிப்பெண்களின் முக்கிய கடமை.

மேலும் அவசர காலங்களில் நிலைமையைச் சமாளிப்பதும் அவர்களின் பொறுப்பு.

சம்பளம் அனைத்துப்படிகளையும் சேர்த்து ஆரம்பக் கட்டத்திலேயே ஒரு விமானப் பணிப்பெண் மற்றும் பிளைட் பர்சருக்கு மாதம் குறைந்த பட்சம் ரூ. 12 ஆயிரம் சம்பளம் கிடைக்கும்.

ஊதியத்தைப் பொருத்தவரை நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும்.

இதர படிகள், பயணம் செய்வதில் சலுகை போன்ற வசதிகளும் உண்டு.

குண்டாகக் கூடாது.

இந்த வேலையில் மிக முக்கியமானது உடல்நலத்தைப் பேணிக்காப்பதுதான்.

எடை அதிகமாகிவிட்டால் முதலில் எச்சரிக்கை தரப்படும்.

எடையைக் குறைப்பதற்கு போதிய கால அவகாசமும் தரப்படும். அதையும் மீறி உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியவில்லையென்றால் தொடர்நது வேலையில் இருக்க முடியாது.


S. ஆபிதீன்

இன்ஷா அல்லாஹ் தொடரும்...


வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்
மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!

Thursday, August 23, 2007

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்... தொடர் 4

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்
Degree & Diploma Courses

S. ஆபிதீன் M.A., M.Sc., M.Phill., B.Ed.,

விரிவுரையாளர், விலங்கியல் துறை

செயலர்,முன்னாள் மாணவர் கழகம்
Dr. ஜாகிர் உசேன் கல்லூரி, இளையான்குடி.
Ilayangudi, Sivaganga District

E-mail: abideen245400@yahoo.com
Ph: 14564-245400/265252

---------------------------------------------------------------------------------------

மீன்வள அறிவியல் படிப்பு

மத்திய அரசின் நிதியுடன் நடைபெறும் கிரிஷி விக்யான் கேந்திரா அமைப்புகள் கால்நடை மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.

அது மட்டுமின்றி புளுகிராஸ், அனிமல் பெல்ஃபேர் போர்டு ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகளும் கால்நடை மருத்துவப் பட்டதரிகளுக்கு பெருமளவில் வேலை வாய்ப்பை வழங்குகின்றன.

மீன்வள அறிவியல் பட்டப்படிப்பை தூத்துக்குடியிலுள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நடத்துகிறது.

தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இக்கல்லூரி, மீனவள அறிவியலில் இளநிலைப் பட்டம் (பி.எஃப்.எஸ்.சி.) மற்றும் பி.எச்.டி., படிப்புகளை நடத்துகிறது.

மீன்வள அறிவியலில் பட்டப்படிப்பில் சேர விரும்புவோரும், அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தொழில் நுட்ப நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, உரிய கட் ஆஃப் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

உயர்கல்வி வாய்ப்புகள்

மீன்வள அறிவியலில் பட்டப்படிப்பு படித்தோர், எம்.எஃப்.எஸ்.சி எனப்படும் முதநிலைப் பட்டப்படிப்பை படிக்க வாய்ப்புகள் உள்ளன. இதே கல்லூரியில் முதநிலைப் பட்டப்படிப்பு நடத்தப்படுகிறது. அதன் பிறகு பி.எச்.டி ஆராய்ச்சி படிப்பு படிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

வேலை வாய்ப்புகள்

மீன்வள அறிவியல் பட்டதாரிகளுக்கு, மீன் பதப்படுத்தும் நிறுவனங்கள், மீன் உணவு தயாரிக்கும் நிறுவனங்கள் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.

எம்.எஃப்.எஸ்.சி படித்தோர் ஏ.ஆர்.எஸ் தேர்வில் வெற்றி பெற்றால் இந்திய வேளாண்கழகத்தின் ஆராய்ச்சி நிலையங்களில் விஞ்ஞானியாகப் பணியாற்ற வாய்ப்புகள் உண்டு.

நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால், நாட்டின் பல பகுதிகளிலுள்ள மீன்வளக் கல்லூரிகளில் விரிவுரையாளராக வேலை பெறவும் வாய்ப்புகள் உண்டு.


அரசின் மீன்வளத்துறையில் இப்படிப்பு படித்தோருக்கு வேலை வாய்ப்புகள் உண்டு. ஆயினும் இப்படிப்பு படித்தோர், தனியார் வேலைவாயப்புகளையே விரும்புகிறார்கள். காரணம் உழைப்புக்கேற்ற ஊதியம் தனியார் துறையில் கிடைப்பதே.

மீன்வள அறிவியல் படித்தோருக்கு ஆந்திரப் பிரதேசத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. காரணம் அங்கு மீன் பண்ணைகள் அதிக அளவில் இருப்பதே.


எஸ். ஆபிதீன்

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்

மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!

Wednesday, July 18, 2007

ராமச்சந்திரா பல்கலையில் புதிய பிஎச்.டி., படிப்புகள்

ராமச்சந்திரா பல்கலையில் புதிய பிஎச்.டி., படிப்புகள்

"போரூர் ராமச்சந்திரா பல்கலையில் "ஒருங்கிணைந்த'' மற்றும் "இரண்டு ஆய்வு நிலையங்களில் செயல்படும் பிஎச்.டி., திட்டங்கள்'' அறிமுகப்படுத்தப் படுகிறது,'' என்று சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தரும், ராமச்சந்திரா பல்கலைக் கழக ஆய்வு இயக்குனர் மற்றும் தலைமை ஆலோசகர் எஸ்.பி.தியாகராஜன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் பல்கலைக் கழக மானியக் குழு ஆகியவை இந்திய பல்கலைக் கழகங்களில் ஆய்வுத் தரம் உயரிய நிலையை அடைய வழிமுறைகளை வகுத்துள்ளன. மருத்துவ ஆய்வு பெரியளவில் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை முடிவினை மேற்கொண்டு, அதற்கான திட்டங்களை உருவாக்கியுள்ளன.

இவற்றினை செயல்படுத்தும் விதத்தில் இந்தியாவில் உள்ள மருத்துவ பல்கலைக் கழகங்களில் முதல் முறையாக, ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக் கழகம் பிஎச்.டி., ஆய்வுத் திட்டத்தை மாற்றி அமைத்துள்ளது.

மருத்துவ படிப்பு படித்தவர்கள் பிஎச். டி., பட்டம் பெறுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்., போன்ற மேற்படிப்புகள் படிப்பவர்கள், பிஎச்.டி., பட்டம் பெறுவதன் மூலம் மருத்துவ ஆய்வினை பிற்காலத்தில் மேற்கொள்ள வசதியாக, இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் இரண்டு புதிய பிஎச்.டி., திட்டங்கள் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்படும். ஒருங்கிணைந்த பிஎச்.டி., திட்டம்: இந்த திட்டத்தின்படி எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்., மருத்துவ பட்ட மேற்படிப்பு படிப்போர், அந்த படிப்புகளுக்கு சேரும் போதே, பிஎச்.டி., படிப்பில் சேரலாம்.

மூன்றாண்டுகளில் பட்ட மேற்படிப்பு முடித்தவுடன், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் தங்கள் பிஎச்.டி., ஆய்வினையும் ஆய்வுத் தரம் குறையாமல் முடித்து பட்டம் பெற இந்த திட்டத்தில் வழி வகுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளில் இருந்து மாறுபடாமல் கொண்டு வரப்பட்டுள்ளது.


இரண்டு ஆய்வு நிலையங்களில் செயல்படும் பிஎச்.டி.,

வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றங்களில் மருத்துவ நிபுணர்கள், அறிவியல் நிபுணர்களுடன் அறிவியல் ஆய்வு நிலையங்களுடன் இணைந்து மருத்துவ ஆய்வு செய்ய வேண்டியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ராமச்சந்திரா பல்கலைக் கழகம், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பல்கலைக் கழகங்கள், மருத்துவ மற்றும் அறிவியல் ஆய்வு நிலையங்களுடன் கல்வி மற்றும் ஆய்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன.

இந்த திட்டத்தின் படி ஆய்வு செய்யும் மாணவர்கள் தாங்கள் ஆய்வு செய்யும் மூன்றாண்டு காலத்தில் ஓராண்டு வரை ஒப்பந்தம் செய்துள்ள ஆய்வு நிலையங்களில் சென்று ஆய்வு செய்ய வழி அமைத்து தரும்.

இதன் மூலம் ஆய்வுத்தரம் உயரும்; பெரிய ஆய்வுத் திட்டங்கள் உருவாக உறுதுணையாக அமையும். இதற்கான கட்டணங்கள் பல்கலை மானியக் குழு நிர்ணயித்தபடி பெறப்படும்.

இவ்வாறு தியாகராஜன் தெரிவித்தார். பல்கலைக்கழக வேந்தர் வெங்கடாச்சலம், துணை வேந்தர் ரங்கசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Tuesday, June 26, 2007

பிஎச்.டி., படிப்புக்கு நேர் காணல்

பிஎச்.டி., படிப்புக்கு 29ம் தேதி நேர் காணல்


கோவை அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான நேர்காணல் வரும் 29ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து கோவை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பிஎச்.டி., மற்றும் எம்.எஸ்., படிப்புகளுக்கு 533 பேர் 14 துறைகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களுக்கான நேர்காணல் நிகழ்ச்சி வரும் 29 மற்றும் 30ம் தேதி நடக்க உள்ளது.
இந்த விவரங்கள் www.annauniv.ac.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.