இக்னோ பல்கலை தேர்வுக்கு ஆன்லைனில் பணம் செலுத்த வசதி
இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலை பருவத் தேர்வுக்கு புதிய விண்ணப்ப படிவம் வினியோகிக்கப்படுகிறது.
மாணவர்கள் விண்ணப்ப படிவத்தை இக்னோவின் மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
புதிய படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
நகல் எடுத்தும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முன் கடந்த பருவத் தேர்வு முடிவை, இக்னோ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகள் வெளியிடாத தாள்களுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.
தாள் பாடக் குறியீட்டை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்தால் போதுமானது.
ஆன்லைன் முறையில் தேர்வு விண்ணப்பக் கட்டணம் செலுத்த வகை செய்யப்பட்டுள்ளது.
செப்., 1ம் தேதி இது அமலுக்கு வருகிறது.
பல்கலை மதுரை மண்டல இயக்குனர் பன்னீர்செல்வம் இதைத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment