]]
Showing posts with label சிறுபான்மையினர். Show all posts
Showing posts with label சிறுபான்மையினர். Show all posts

Wednesday, September 26, 2007

சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு

சிறுபான்மையினர் இடஒதுக்கீடு

தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

தமிழகத்தில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்து விட்டது.

மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 19ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

கோவையைச் சேர்ந்த வக்கீல் எம்.லோகநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கடந்த 2001ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பிற்படுத்தப்பட்டோர் 46.14 சதவீதம் உள்ளனர்.

இவர்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகைக்கு இணையான இடஒதுக்கீடு இல்லை.

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு தனித்தனியாக 3.5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்துதான் இந்த ஏழு சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.

ஓட்டு வங்கிக்காக இந்த இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

கொங்கு வேளாளர் சமூகத்தின் மக்கள் தொகை எட்டு சதவீதம் உள்ளது.

மக்கள் தொகை அடிப்படையில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது போல் அதே அடிப்படையில் தனியாக இடஒதுக்கீடு வழங்குமாறு கோர கொங்கு வேளாளருக்கும் உரிமை உள்ளது.

அதுமட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வரும் ஒவ்வொரு ஜாதியும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு இணையாக தங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க கோரலாம்.

எனவே குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தனி இடஒதுக்கீடு வழங்குவது என்பது பாரபட்சமானது.

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டதுபோல் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள மற்ற ஜாதியினருக்கும் வழங்க வேண்டும்.

தமிழக அரசின் கொள்கை முடிவு அவசர சட்டமாக கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கு ஜனாதிபதியின் முன் அனுமதி பெறவில்லை.

அவசரச் சட்டம் உள்நோக்கம் கொண்டது.

சட்டசபையில் விவாதிக்கப்படாமல் இது கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனை ரத்து செய்ய வேண்டும்.

எனவே, கல்வி மற்றும் பணிகளில் பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

அதனை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இவ்வழக்கு நேற்று தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் சீனியர் வக்கீல் விஜயன் ஆஜராகி, 'மக்கள் தொகை அடிப்படையில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஜனாதிபதியின் முன் அனுமதி பெறப்படவில்லை.

ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இருக்கும்போது மீண்டும் ஒரு ஒதுக்கீடு எப்படி என்கிற கேள்வி எழுகிறது.

சிறுபான்மையினர் என்பதற்காக அல்லாமல் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ளனர் என்பதற்காக அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

தற்போது மீண்டும் உள்பிரிவு கொண்டு வருவது கேலிக்குரியது.

பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து இந்த உள்ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது.

மற்ற ஒதுக்கீட்டை அரசு தொடரவில்லை. அவசரச் சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்' என வாதாடினார்.

அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விடுதலை ஆஜராகி, 'ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்ததன் மூலம் 50 சதவீத ஒதுக்கீட்டை தாண்டி விட்டது.

எனவே, அது ரத்து செய்யப்பட்டது.

பின்னர் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டுக்கு தடை விதிக்கப்படவில்லை.

தமிழக மக்கள் தொகையில் 37 லட்சம் கிறிஸ்தவர்கள், 34 லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர்.

இரண்டையும் சேர்த்தால் தமிழக மக்கள் தொகையில் 10 சதவீதத்துக்கும் மேல் வருவர்.

இவர்களுக்கு தனியாக ஏழு சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

அவசர சட்டத்துக்கு தடை விதிக்கக் கூடாது' என வாதாடினார்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி அடங்கிய 'முதல் பெஞ்ச்', அவரச் சட்டத்துக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

வழக்கை விரிவாக விவாதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நான்கு வாரங்களில் மத்திய அரசு, மாநில அரசு பதிலளிக்க வேண்டும், அதற்கு இரண்டு வாரங்களில் மனுதாரர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Saturday, September 15, 2007

சிறுபான்மையினர் சார்பாக கருணாநிதிக்கு பாராட்டு விழா

சிறுபான்மையினர் சார்பாக கருணாநிதிக்கு பாராட்டு விழா

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் முடிவு

இடஒதுக்கீட்டுக்கு எதிராக அவசர சட்டம் பிறப்பிப்பதாக அறிவித்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு, சிறுபான்மையினர் சார்பில் பாராட்டு விழா நடத்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் முடிவு செய்துள்ளது.

இடஒதுக்கீடு

முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மை சமுதாய மக்களுக்கு தலா 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க அவசரச் சட்டம் பிறப்பிப்பதாக முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தது தொடர்பாக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் ஹைதர் அலி ஆகியோர் பேட்டி அளித்தனர்.

அவர்கள் கூறியதாவது:-

பாராட்டு விழா

இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு கேட்டு கட்சி தொடங்கிய 1995-ம் ஆண்டு முதல் கோரி வருகிறோம். இந்தக் கோரிக்கைக்காக மாநாடு, பேரணிகளை நடத்தி இருக்கிறோம். எங்கள் கோரிக்கையை தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சேர்த்து, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி, இந்தியாவிலேயே அனைவருக்கும் முன்னுதாரணமாக முதல்-அமைச்சர் கருணாநிதி இருக்கிறார்.

எனவே, எங்களது நீண்டகால கனவை நனவாக்கிய அவரை பாராட்டி, சிறுபான்மை சமுதாயத்தினர் விழா நடத்த இருக்கிறோம். இதற்காக அவரிடம் தேதி கேட்டு இருக்கிறோம்.

அ.தி.மு.க.

இஸ்லாமியர்களில் 6 பிற்படுத்தப்பட்ட பிரிவினரும், கிறிஸ்தவ சமுதாயத்தில் 5 பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் இதனால் பயன் பெறுவார்கள். சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை உடனடியாகக் கொண்டு வர வேண்டும் என்று சட்டசபையில் அ.தி.மு.க. சார்பில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

எனவே முதல்-அமைச்சர் கருணாநிதியின் இந்த முடிவை அ.தி.மு.க. எதிர்க்காது.

ஒருமைப்பாடு

நீண்டகாலமாக மூடி இருந்த கதவு திறந்து இருக்கிறது. அதனால் இந்த இடஒதுக்கீட்டில் திருப்தியா? என்ற கேள்வி இப்போது எழவில்லை. 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்த பிறகு அதனடிப்படையில் அதுதொடர்பாக முடிவெடுப்போம்.

முந்தைய கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் 6 சதவீதமும், இஸ்லாமியர்கள் 5.78 சதவீதமும் உள்ளனர். மத அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டு வரப்படுவதால் சமுதாயத்தில் பிளவு ஏற்படாது. மாறாக, சிறுபான்மையினரும் மக்களுக்கு சேவை செய்ய வழி கிடைப்பதால், தேசிய ஒருமைப்பாடு வலுப்பெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Saturday, July 28, 2007

ஜீவனாம்சம் பெற முடியாத முஸ்லிம் பெண்களுக்கு உதவும் சங்கம் துவக்கம்

ஜீவனாம்சம் பெற முடியாத முஸ்லிம் பெண்களுக்கு உதவும் சங்கம் துவக்கம் *சிறுபான்மையினர் கழக தலைவர் தகவல்

ஜீவனாம்சம் பெற முடியாத முஸ்லிம் பெண்களுக்காக உதவும் சங்கம் துவங்கப்பட உள்ளதாக சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் சேவியர் அருள்ராஜ் தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:

"முஸ்லிம், கிறிஸ்தவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த சிறுதொழில் துவங்க ரூ. ஒரு லட்சம் வரை கடனாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களுக்கும் தலா ரூ. ஒரு கோடி கடன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு ரூ.1.25 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடன் பெற விரும்புபவர்கள் விண்ணப்பத்தை அந்தந்த கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 378 பேர் பயனடைந்துள்ளனர்.


மாநில அளவில் சிறுபான்மையினர் பயன்பெற 48 விதமான தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதற்காக அரசு ரூ.2.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.


முஸ்லிம் பெண்கள் விவாகரத்து பெற்றால் அவர்களுக்கு ஜீவனாம்சம் கிடைக்க வசதியாக முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் துவங்கப்பட உள்ளது. இச்சங்கத்தின் தலைவராக கலெக்டர் இருப்பர். ஒன்பது பேர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்படுவர்.


நன்கொடை வசூலித்தும் சங்க நிதி வருவாயை பெருக்கிக் கொள்ளலாம். எந்த அளவு நன்கொடை வசூலிக்கிறார்களோ அதே அளவு தொகையை அரசு மானியமாக வழங்கும். தொகை பாங்க்கில் டெபாசிட் செய்யப்பட்டு விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்கள், கணவனை இழந்தவர்களுக்கு இந்த நிதியிலிருந்து உதவி செய்யப்படும்.

நலிந்த முஸ்லிம் பெண்களுக்கு சங்க நிதியிலிருந்து மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்கான பயனாளிகளை சங்க உறுப்பினர்கள் தேர்வு செய்வர்.

இவ்வாறு சேவியர் அருள் ராஜ் கூறினார்.

Saturday, July 7, 2007

சிறுபான்மையினருக்கான தனி இடஒதுக்கீடு வந்தே தீரும்

சிறுபான்மையினருக்கான தனி இடஒதுக்கீடு வந்தே தீரும்
கருணாநிதி அறிவிப்பு


சிறுபான்மையினருக்கான தனி இடஒதுக்கீடு வந்தே தீரும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.


தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை வருமாறு:-


சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு


கேள்வி:- ஆந்திர மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு நான்கு சதவிகித இட ஒதுக்கீடு செய்வதற்கான அவசரச் சட்டம் வரப் போவதாகச் செய்திகள் வந்துள்ளதே?


பதில்:- தமிழ்நாட்டிலே கூட கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஆட்சி தான் பொறுப்பிலே உள்ளது.

இந்தப் பிரச்சினை குறித்து திராவிடர் கழகத் தலைவர் வீரமணி விடுத்துள்ள அறிக்கையில், "இஸ்லாமிய சமுதாயத்தினர் தங்களுக்கு தனி இடஒதுக்கீடு கோருவது நியாயமானதே. இது தொடர்பாக அவசரப்பட்டு சட்டம் கொண்டு வந்து நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டுவிடக் கூடாதே என்பதற்காக இதுகுறித்து தமிழக அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

இது தொடர்பாக சட்ட நிபுணர்கள், அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து முதல்வர் கருணாநிதி தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார். இதற்காகத்தான் இந்தப் பிரச்சினையில் அரசு அவசரம் காட்டாமல் காலதாமதம் செய்து வருகிறது.

இதனால் இந்தக் கோரிக்கையை அரசு கைவிட்டதாக அர்த்தமில்லை. இந்தப் பிரச்சினையை சிலர் அரசியலாக்க முயன்று வருகின்றனர். இஸ்லாமிய சமுதாயத்தினர் அவசரப்பட்டு அரசியலாக்கும் முயற்சிகளுக்கு பலியாகிவிடக் கூடாது'' என்று அளித்துள்ள விளக்கத்தையே எனது பதிலாக அளித்திடுகிறேன்.


அண்மையில் கூட அந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றதை அனைவரும் அறிவார்கள். எனவே சிறுபான்மையோருக்கான தனி இடஒதுக்கீடு வந்தே தீரும்.