]]
Showing posts with label மருத்துவமனை. Show all posts
Showing posts with label மருத்துவமனை. Show all posts

Tuesday, January 26, 2010

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. மருத்துவமனையில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ஆரம்பம்

Saturday, September 29, 2007

இந்திய முஸ்லிம் டாக்டர்கள் & செவிலியர்கள் தேவை

சவுதி மருத்துவமனைகளில் பணியாற்ற இந்திய முஸ்லிம் டாக்டர்கள் தேவை

சவுதி அரேபியாவில் புனித ஹஜ் காலத்தில் ஒரு மாத காலம் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிய முஸ்லிம் பிரிவை சேர்ந்த மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர்.


அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில், 2007ம் ஆண்டு புனித ஹஜ் காலத்தில் ஒரு மாத காலம் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிய முஸ்லிம் பிரிவை சேர்ந்த

சிறப்பு நிலை மருத்துவர்கள்,

தீவிர கண்காணிப்பு பிரிவு,

அவசர சிகிச்சைப் பிரிவு,

இருதய மருத்துவர்கள்,

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுபவம் பெற்ற மருத்துவர்கள்,

பி.எஸ்சி., பயின்று தீவிர கண்காணிப்பு பிரிவில் இரண்டு ஆண்டு அனுபவம் பெற்ற பெண் செவிலியர்கள்

மற்றும் ஐந்தாண்டு அனுபவம் பெற்ற செவிலியர் மேற்பார்வையாளர்கள் தேவைப்படுகின்றனர்.

மேற்படி பணிக்கு தகுதி பெற்ற முஸ்லிம் மருத்துவர்கள் மற்றும் பெண் செவிலியர்கள் தட்டச்சு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பணி தொடர்பான விவரங்களை குறிப்பிட்டு, கல்வி, அனுபவம் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்களுடன்

தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்,

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்,

தமிழக வீட்டு வசதி வணிக வளாகம், முதல் தளம்,

எண்.48, டாக்டர் முத்துலட்சுமி சாலை,

அடையாறு,

சென்னை - 600020

என்ற முகவரிக்கு வரும் ஐந்தாம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, September 5, 2007

கண் பார்வை இழப்பு மற்றும் சிகிச்சை முகாம்

பரங்கிப்பேட்டையில் கண் பார்வை இழப்பு மற்றும் சிகிச்சை முகாம்

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் செயின்ட் ஆல்பன்ஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து கண் பார்வை இழப்பு மற்றும் சிகிச்சை முகாம் ஒன்றினை கடந்த மாதம் பரங்கிப்பேட்டை அரசினர் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடத்தினர்.

இதில திரளான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

நிகழ்ச்சியில் புவனகிரி தொகுதி மக்கள் பிரதிநிதி செல்வி ராமஜெயம் கலந்து கொண்டு உரையாற்றினார் .

செய்தி : www.parangipettai.com