]]
Showing posts with label பயிற்சி. Show all posts
Showing posts with label பயிற்சி. Show all posts

Thursday, June 3, 2010

சென்னையில் தஜ்வீதுல் குர்ஆன் பயிற்சி பெற்ற ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

Saturday, September 22, 2007

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்... தொடர் 27

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்
Degree & Diploma Courses

S. ஆபிதீன் M.A., M.Sc., M.Phill., B.Ed.,

விரிவுரையாளர், விலங்கியல் துறை
செயலர், முன்னாள் மாணவர் கழகம்
Dr. ஜாகிர் உசேன் கல்லூரி, இளையான்குடி, சிவகங்கை மாவட்டம்.

E-mail: abideen245400@yahoo.com - Ph: (04564) 245400 / 265252

-------------------------------------------------------------------------------------------------



கூட்டுறவு பயிற்சி (Co-Operative Training)

கூட்டுறவு பயிற்சிக்கான டிப்ளமோ படிப்பபை 2 ஆண்டுகள் படிக்க வேண்டும்.

இப்பயிற்சி முடித்தவர்களுக்கு அரசின் கூட்டுறவு வங்கிகளிலும் கூட்டுறவு விநியோக சங்கங்களிலும் வேலை வாய்ப்பிற்கு சாத்தியம் உள்ளது.

அதிகமான கல்வி நிறுவனங்கள் இத்துறைக்கான பயிற்சி அளித்து ஒவ்வொரு ஆண்டும் மிக அதிக மாணவர்களை வெளியில் அனுப்பினாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தொடர்ந்து வேலையில் அமர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

கல்வித்தகுதி

12 அல்லது சமமான படிப்பு 12ல் வணிகம் மற்றும் பொருளாதார பாடங்களை படித்தவர்கள் இத்துறையில் எளிதாக நுழையலாம்.

கற்றுத்தரும் குறிப்பிடத் தகுந்த இடங்கள்

நடேசன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மானேஜ்மென்ட் அண்ட் கோ ஆபரேடிவ் ட்ரெய்னிங்,
அண்ணா நகர், சென்னை - 40.

அறிஞர் அண்ணா மானேஜ்மென்ட் அண்ட் கோ ஆபரேட்டிவ் ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்,
காஞ்சிபுரம்.

வேலூர் மானேஜ்மென்ட் அண்ட் கோ ஆபரேட்டிவ் ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்,
வேலூர்.

நாச்சியப்பா மானேஜ்மென்ட் அண்ட் கோ ஆபரேட்டிவ் ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்,
சேலம்.

இராமலிங்கம் மானேஜ்மென்ட் அண்ட் கோ ஆபரேட்டிவ் ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்,
கோயம்புத்தூர்.

எம். குமாரசாமி மானேஜ்மென்ட் அண்ட் கோ ஆபரேட்டிவ் ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்,
திருநெல்வேலி.

சங்கரலிங்கனார் மானேஜ்மென்ட் அண்ட் கோ ஆபரேட்டிவ் ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்,
சாத்தூர்.

பாண்டிய நாடு மானேஜ்மென்ட் அண்ட் கோ ஆபரேட்டிவ் ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்,
மதுரை.

S. ஆபிதீன்

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்

மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!

Friday, September 7, 2007

மூலிகைப் பொருள் தயாரிப்பு பயிற்சி

மூலிகைப் பொருள் தயாரிப்பு பயிற்சி

மூலிகைப் பொருள் தயாரிக்கும் தொழில் தொடங்க, கடலூர் அரிமா சங்கம் பயிற்சி அளிக்கிறது.

இது குறித்து அரிமா சங்கத் தலைவர் டாக்டர் ஏ. ரவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொழில் முனைவோருக்கு மத்திய அரசின் கதர் கிராமத் தொழில் ஆணையத்தின் மூலம், கடலூர் அரிமா சங்கம் இந்த சிறப்பு பயிற்சியை அளிக்கிறது.

மூலிகைகளைக் கொண்டு கூந்தல் தைலம், முகப்பொலிவுப் பொடி, மூலிகை ஷாம்பு, பற்பொடி, உடல் பருமனைக் குறைக்கும் மூலிகை சூரணம், காஸ்மெட்டிக் எண்ணெய், வலி நிவாரணிகள் தயாரித்தல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மூலிகைப் பொருள்களைத் தயாரிக்கப் பயிற்சி அளிக்கப்படும்.

சிறுதொழில் தொடங்க நினைப்போருக்கு இந்தப் பயிற்சி மிகவும் உதவியாக இருக்கும்.

பயிற்சிக்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதி 10-ம் வகுப்பு.

பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.

இவர்கள் சிறுதொழில் தொடங்க வங்கிக் கடன் பெறுவதற்கு சான்றிதழ் துணைபுரியும்.

பயிற்சிக் கட்டணம் ரூ. 350.

10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை பயிற்சி நடைபெறும்.

பெயர்களை பதிவு செய்து கொள்ள, 7-ம் தேதிக்குள் கடலூர் மஞ்சக்குப்பம் அரிமா டாக்டர் ஏ. ரவியை அணுகலாம். செல்ஃபோன் எண்: 93676- 22255.

Sunday, August 19, 2007

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்... தொடர் 1

கடலும் கப்பலும் - கடல் (கப்பல்) துறை பயிற்சி

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்
Degree & Diploma Courses

S. ஆபிதீன் M.A., M.Sc., M.Phill., B.Ed.,

விரிவுரையாளர், விலங்கியல் துறை
செயலர், முன்னாள் மாணவர் கழகம்
Dr. ஜாகிர் உசேன் கல்லூரி, இளையான்குடி.

Ph: 14564-245400/265252 Ilayangudi, Sivaganga District

---------------------------------------------------------------------------------------


கப்பல் துறை பிரிவுகள்

கப்பலைப் பொறுத்தவரை மூன்று பிரிவுகள் உள்ளன.

ஒன்று டெக், இரண்டாவது எஞ்சின், மூன்றாவதாக சலூன் (சமையல் பிரிவு)

டெக் பிரிவில் போக்குவரத்து, சரக்கு கையாளுதல், பராமரிப்பு போன்றவைகள் அடங்கும். இன்ஜின் பிரிவு இஞ்சினின் இயக்கத்தையும் கேட்டரிங் பிரிவு சமையலையும் கவனித்துக் கொள்ளும் பிரிவாகும். இம்மூன்று பிரிவும் சிறப்பாக செயல்படும் கப்பல்கள் மிகச் சிறந்தவையாக இருக்கும்.


கப்பல் மாலுமியாக சேர விரும்புபவர்களுக்கு டைரக்டரேட் ஆப் ஷிப்பிங் இந்திய கப்பல் அமைச்சகத் துறையின் ஒப்புதலோடு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்நிறுவனத்தில் நான்கு மாத பயிற்சி கொண்ட பொதுப்படையான புதுமுக வகுப்பிற்கும், சமையல் பிரிவிற்கும் (Saloon) குறைந்தது 10ம் வகுப்பு முடித்தவராக இருத்தல் வேண்டும்.

வயது 17.5 முதல் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

இப்பயிற்சி முடிந்தவுடன் இந்திய CDCவுடன் இந்திய கப்பல் அமைச்சகம் சான்றிதழை வழங்கும். இதன் மூலம் எந்த கப்பல் கம்பெனியிலும் பணியாற்றலாம்.


மேலும் இதில் அதிகாரியாகவோ, இன்ஜினியராகவோ ஆக விரும்புபவர்கள் இந்திய அரசாங்கத்தின் மெர்க்கன்டைல் டிபார்ட்மென்ட் நடத்தும் தேர்வினை எழுதுவதன் மூலமாக அந்த இலட்சியத்தை சுலபமாக அடைய முடியும். டெக்கேட் மற்றும் மரைன் இன்ஜினியரிங் பயிற்சி பெறுபவர்கள் நிச்சயமாக அதிகாரியாகவோ இன்ஜினியராகவோ உருவாகலாம்.

கல்வித்தகுதி

இப்பயிற்சியில் சேர 12ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 20 இருக்க வேண்டும்.

பி.எஸ்.சி (B.Sc.,) படித்திருந்தால் 55 சதவீத மதிப்பெண்களும் வயது 22க்குள்ளாக இருக்க வேண்டும்.

அல்லது B.E., / B.Tech முடித்திருப்பவர்கள் 24 வயது கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

இதன் முதன்மை பயிற்சி காலம் 3 - 5 மாதங்களாகும்.

இப்பயிற்சிகள் மூலம் கப்பல் அதிகாரி ஆகவும் அதன் பிறகு தேர்வு எழுதுவதன் மூலம் படிப்படியான பதவி உயர்வைப் பெறலாம்.

கப்பல் இன்ஜினியரிங் துறையில் பயில்பவர்கள் கப்பலில் இன்ஜினியராக பணியாற்ற முடியும்.

இப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள் மெக்கானிகல், மரைன் எலக்டிரிக்கல், ஷிப் பில்டிங் டிப்ளமோ படிப்பில் குறைந்தது இறுதி ஆண்டில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றவராக இருத்தல் வேண்டும். வயது 22க்கு குறைவாக இருக்க வேண்டும்.


மேற்கண்ட டெக்கேட் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பட்டம் டிப்ளமோ ஏதாவது ஒன்றில் ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

மாணவர்கள் உடல் தகுதி குறைபாடு இல்லாதவர்களாகவும் கண் பார்வை 6:6 என்ற அளவில் கண்ணாடி அணியாதவர்களாகவும் வண்ணங்களை துல்லியமாக அறிந்து கொள்ளும் திறம்படைத்தவர்களாகவும் இருக்க வேண்டும்.

இன்ஜினியரிங் துறையில் சேர விரும்புபவர்கள் உடல்நலத் தகுதியோடு கூட 10, 12, டிப்ளமா ஏதாவது ஒன்றில் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும்.

கண் கண்ணாடி அணிபவராக இருந்தால் கண்ணாடி ப்ளஸ் பை மைனஸ் 2.5க்கு உள்பட்ட சக்தியாக இருத்தல் அவசியம்.

எங்கே சேரலாம்

இப்பயிற்சியில் சேர சிறந்த பயிற்சியினை யார் அளிப்பார் என்று நீங்கள் சிந்திப்பது புரிகிறது. உங்களது கேள்விக்கான பதிலை சென்னை SAMS நிறுவனம் தருகிறது.

Southern Academy of Maritime Studies Pvt. Ltd. (SAMS) என்பது D.G. ஷிப்பிங் அப்ரூவ்டு நிறுவனம், தற்பொழுது கப்பல் கல்வியில் முதன்மையாக விளங்குகிறது மற்றும் ISO 9002-2 சான்றிதழ் பெற்றுள்ளது. Det Norske Veritas Norwayவுடன் கூட்டாக இணைந்து செயல்படுகிறது.

விபரங்களுக்கு :

சதர்ன் அகாடமி அஃப் மெரிடிம் ஸ்டடீஸ்

பி.லிட். எண் 110, கிழக்கு மாதா சர்ச் தெரு,

ராயபுரம் சென்னை - 600 013

தொலைபேசி 25900558, 25900563, 25902674

மொபைல் 0-98410-37738, 31042100, 31037933

E-mail:samstudy@vsnl.com

Website:www.samsindia.com

எஸ். ஆபிதீன்

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்
மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!

Wednesday, July 11, 2007

சுயஉதவிக்குழு செயல்பாடுகள் குறித்து தவறான தகவல்

சுய உதவிக்குழு செயல்பாடுகள் குறித்து தவறான தகவல்

தொண்டு நிறுவனங்கள் மீது கலெக்டர் திடீர் பாய்ச்சல்

பரங்கிப்பேட்டை: சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகள் குறித்து தவறான தகவல்களை தொண்டு நிறுவனங்கள் தருகின்றன என கலெக்டர் ராஜேந்திர ரத்னு தெரிவித்தார்.


பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை பகுதியில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு நாள் பயிற்சி பரங்கிப்பேட்டையில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். கிள்ளை பேரூராட்சி மன்ற தலைவர் கிள்ளை ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கடலூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜம்பு நாதன் வரவேற்றார்.

கலெக்டர் ராஜேந்திர ரத்னு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயிற்சியை துவக்கி வைத்து பேசியதாவது:


கிள்ளை, பரங்கிப்பேட்டை பகுதிகளில் சுய உதவிக் குழுக்கள் சிறப்பாக செயல்படுகின்றன. இருந்தும் வருமானம் தரும் தொழிலாக தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும். இங்கு சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள், அரிசிக்கடை, மளிகை கடை, மீன் வியாபாரம், கருவாடு வியாபாரம் செய்வதாக கூறுகின்றனர். அவர்கள் நல்ல முறையில் செயல்படவேண்டும். சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்து தொண்டு நிறுவனங்கள் தவறான தகவல்களை தருகின்றனர்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.


நிகழ்ச்சியில் செயல் அலுவலர்கள் சேவியர் அமலதாஸ், ஜோதி மாணிக்கம், பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற துணை தலைவர் செழியன், சிதம்பரம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் ராமச்சந்திரன், வங்கி ஆய்வாளர் விநாயகசுந்தரம், கூட்டுறவு வங்கி செயலாளர்கள் சக்கரபாணி, தமிழ்ச் செல்வன், கவுன்சிலர்கள் பாவாஜான், நடராஜன், செந்தில்குமார், பசிரியாமா, ராமலிங்கம், பரங்கிப்பேட்டை வி.ஏ.ஒ., அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கடலூர் சமுதாய ஒருங்கிணைப்பாளர் சுனில் நன்றி கூறினார்

Saturday, June 23, 2007

கடலுõர் பெண்கள் ஐ.டி.ஐ.,யில் தொழிற் பிரிவுகளுக்கு பயிற்சி

கடலுõர் பெண்கள் ஐ.டி.ஐ.,யில் தொழிற் பிரிவுகளுக்கு பயிற்சி

கடலுõர் : ஆங்கிலம் மற்றும் தமிழ் சுருக்கெழுத்து, தட்டச்சு உள்ளிட்ட தொழிற்பிரிவுகளுக்கு மகளிர் ஐ.டி.ஐ.,யில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது குறித்து அரசு மகளிர் ஐ.டி.ஐ.,முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடலுõர் செம்மண்டலத்தில் உள்ள அரசு பெண்கள் ஐ.டி.ஐ., யில் வேலைவாய்ப்புள்ள பல தொழில் பிரிவுகளில் பெண்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆங்கிலம் மற்றும் தமிழ் சுருக்கெழுத்து, தட்டச்சு, கம்ப்யூட்டர் இயக்குபவர், திட்டமிடுதல் உதவியாளர் ஆகிய தொழிற் பிரிவுகளுக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களும்,
கட்டட வரைவாளர், இயந்திரப் பட வரைவாளர், கம்மியர் மின் அணுவியல், தகவல் தொழில் நுட்பம் மற்றும் மின்னணுவியல் சாதனங்கள் பராமரிப்பு ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்றவர்களும்,
துணி வெட்டுதல் மற்றும் தையல் வேலை தொழிற்பிரிவுகளுக்கு குறைந் தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தகுதியின் அடிப்படையில் மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும்.
சுருக்கெழுத்து, தட்டச்சு பிரிவில் தற்போது கம்ப்யூட்டர் பயிற்சியும், பேக்ஸ், ஜெராக்ஸ் போன்ற அலுவலக உபகரணங்களை இயக்கும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
துணி வெட்டுதல், தையல் தொழிற் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், கண்டிப்பாக 8ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகலை இணைக்க வேண்டும். பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்கள் ரூ.50க்கு வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 6ம் தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.