]]
Showing posts with label மத்திய அரசு. Show all posts
Showing posts with label மத்திய அரசு. Show all posts

Wednesday, September 19, 2007

டிப்ளமா, பிளஸ் 2 மாணவர்களுக்கு வாய்ப்பு

மத்திய அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

டிப்ளமா, பிளஸ் 2 மாணவர்களுக்கு வாய்ப்பு

மத்திய அரசின் தொழில் பழகுனர் பயிற்சி வாரியம் சார்பில் மதுரை லதாமாதவன் பாலிடெக்னிக் கல்லூரியில் செப்.28ம் தேதி 'ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம்' நடக்கிறது. இதில் 2,500 பேர் உடனடியாக தேர்வு செய்யப்படுகின்றனர்.


இதுகுறித்து வாரிய இயக்குனர் அய்யாக்கண்ணு கூறியதாவது:

இந்நிறுவனம் பொறியியல் பட்டம், பொறியியல் டிப்ளமா மற்றும் பிளஸ் 2 (தொழிற்கல்வி) பயின்ற மாணவர்களுக்கு ஓராண்டு செயல்முறைப் பயிற்சியினை மாத உதவித் தொகையுடன் வழங்குகிறது.

மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் பயிற்சியளித்து வேலைவாய்ப்பினை அளிக்கிறது.

தென்மாவட்ட மாணவர்கள் நலன்கருதி வாரியம் சார்பில் மதுரை அழகர்கோயில் கிடாரிபட்டியில் உள்ள 'லதாமாதவன் பாலிடெக்னிக் கல்லூரி'யில் செப்.28ம் தேதி காலை 9.30 மணிக்கு 'ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம்' நடக்கிறது.

இதில் டி.வி.எஸ்., குரூப், சக்தி குரூப், ஸ்பிக் ஜெல் இன்டஸ்டிரியல் கன்ஸ்சல்டன்ட், நோகியா உட்பட 50க்கும் மேற்பட்ட அரசு மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேர்வு செய்கின்றனர்.

இதில் 1500 பொறியியல் டிப்ளமா மற்றும் 1000 பிளஸ் 2 (தொழிற்கல்வி) மாணவ, மாணவர்கள் உடனடியாக தேர்வாகின்றனர்.

டிப்ளமா, பிளஸ் 2 படித்து மூன்று ஆண்டுகளுக்கு உட்பட்டோர் இதில் கலந்து கொள்ளலாம்.

ஏற்கனவே இச்சலுகையை அனுபவித்தவர் கலந்து கொள்ள இயலாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்லூரி முதல்வர் சேதுபதி கூறியதாவது:

முகாமில் கலந்து கொள்வோர் செப்.28ம் தேதி காலை 9.30 மணிக்குள் கல்லூரியில் இருக்க வேண்டும்.

கல்லூரி சார்பில் மேலூர், மத்திய, ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து இலவசமாக பஸ் இயக்கப்படுகிறது.

அரசு டவுன் பஸ் வசதியும் (கட்டணம் உண்டு) செய்யப்பட்டுள்ளது.

அசல் கல்விச் சான்றுகள், சுய குறிப்பு மூன்று நகல்களுடன் மாணவர்கள் வர வேண்டும்.

செப்.21ம் தேதிக்குள் சுய குறிப்புடன் 'இயக்குனர், தொழில் பழகுனர் பயிற்சி வாரியம், 4வது குறுக்குத் தெரு, சி.ஐ.டி., வளாகம், தரமணி, சென்னை-13'

அல்லது

'முதல்வர், லதாமாதவன் பாலிடெக்னிக் கல்லூரி, கிடாரிபட்டி, அழகர்கோயில், மதுரை 625 301' என்ற விலாசத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினர்.

Sunday, September 16, 2007

எட்டாவது வரை மதிய உணவு

எட்டாவது வரை மதிய உணவு!

எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்கும் திட்டத்தை விரிவுப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறை உயர் கமிட்டி, இது தொடர்பாக சமீபத்தில் ஆலோசித்தது. இப்போது ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவு அளிக்கப்படுகிறது. இதை, எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்கலாம் என்று அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்த திட்ட விஸ்தரிப்பை நிதி அமைச்சகம் ஒப்புக் கொண்டது. 'பட்ஜெட்டில் அறிவித்த உத்தரவாதத்தை நிறைவேற்றும் வகையில், மதிய உணவுத் திட்டம், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரைக்கும் நீட்டிக்க முடிவு செய்யப்படும். அடுத்த நிதியாண்டில் இது அமலாகும்' என்று, நிதியமைச்சர் சிதம்பரம் கூறினார்.

'பள்ளியில் படிக்கும் 11 வயது முதல் 14 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் உடல் ஆரோக்கிய வளர்ச்சியை கருத்தில் கொண்டுதான் விரிவுப்படுத்த திட்டமிடப்படுகிறது' என்றும் அமைச்சர் கூறினார்.

மதிய உணவுத் திட்டத்தால், 11 கோடியே 20 லட்சம் பள்ளிக் குழந்தைகள் பயன் பெறுகின்றனர்.

மதிய உணவுத் திட்டத்துக்காக, மாநிலங்களுக்கு 23 லட்சம் டன் உணவு தானியங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.

பள்ளியில் குழந்தைகள் முழு அளவில் சேர வேண்டும்.

பள்ளிப்படிப்பை நிறுத்தக்கூடாது என்பதை ஊக்குவிக்கத் தான், மதிய உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், குழந்தைகள் கணிசமான பேர், பள்ளியில் இருந்து பாதியில் நிற்கும் சதவீதம் குறைந்தபாடில்லை.

மதிய உணவை நீட்டித்தால், பள்ளியில் எட்டாவது வரை படிக்க மாணவர்கள் வருவர் என்று கணக்கிட்டுத்தான், அதை நீட்டிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Sunday, September 9, 2007

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை பெற வேண்டிய அவசியம்

18 நாடுக்கு வேலைக்கு செல்வோர் குடியேற்ற சரிபார்ப்பு கட்டாயம்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர், வரும் அக்டோபர் முதல் தேதியில் இருந்து குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை பெற வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இருப்பினும், 18 நாடுகளுக்கு மட்டும் குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோர் விமான நிலையங்களில் குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை பெற வேண்டியிருந்தது.

கடந்த 20 ஆண்டுகளாக இந்த விதிமுறை அமலில் இருந்தது. இதனால், எந்த பயனும் இல்லை என்றும் இந்த விதிமுறையால் ஊழல்தான் அதிகரிக்கும் என்றும் கூறி, வரும் அக்டோபர் முதல் தேதியிலிருந்து இந்த விதிமுறை நீக்கப்படுவதாக, வெளிநாட்டு இந்திய விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி, பார்லிமென்ட்டில் அறிவித்து இருந்தார்.

இது வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கு துன்புறுத்தல்களில் இருந்து விடுதலை கிடைப்பதாக அமைந்து இருந்தாலும், 18 நாடுகளில் வேலைக்கு செல்வோர் குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன் மொத்தம் 173 நாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை பெற வேண்டியது அவசியமாக இருந்தது.

இவற்றில் சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட், குவைத், கத்தார், ஓமன் போன்ற வளைகுடா நாடுகளுக்கும்,

மலேசியா, சிரியா, ஜோர்டான், ஆப்கானிஸ்தான், தாய்லாந்து, இந்தோனேசியா, ஈராக், புருனே, ஏமன், சூடான், லெபனான் மற்றும் லிபியா ஆகிய 18 நாடுகளுக்கு வேலைக்கு செல்வோர், குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை பெற வேண்டியது அவசியம்.

கடந்த 1983ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியேற்றச் சட்டத்தில் வேலைக்கு செல்வோருக்கு மட்டுமே குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை அவசியம் என்று கூறப்பட்டு இருந்தது.

ஆனால், வேறு காரணங்களுக்காக குறைந்த நாள் வெளிநாடு செல்வோருக்கும் குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை பெறப்பட்டு வந்தது.

கடந்த ஆண்டு மட்டும் வேலை அல்லாமல் வேறு காரணங்களுக்காக வெளிநாடு சென்ற 5.5 லட்சம் பேர் குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை பெற்று வந்தனர்.

அவர்களும் இனி குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை பெற வேண்டிய அவசியம் இல்லை.

இதன் மூலம் அரசுக்கு ரூ.600 கோடி மிச்சமாகும் என்று கருதப்படுகிறது.

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை பெற வேண்டிய அவசியம்

18 நாடுக்கு வேலைக்கு செல்வோர் குடியேற்ற சரிபார்ப்பு கட்டாயம்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர், வரும் அக்டோபர் முதல் தேதியில் இருந்து குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை பெற வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இருப்பினும், 18 நாடுகளுக்கு மட்டும் குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோர் விமான நிலையங்களில் குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை பெற வேண்டியிருந்தது.

கடந்த 20 ஆண்டுகளாக இந்த விதிமுறை அமலில் இருந்தது. இதனால், எந்த பயனும் இல்லை என்றும் இந்த விதிமுறையால் ஊழல்தான் அதிகரிக்கும் என்றும் கூறி, வரும் அக்டோபர் முதல் தேதியிலிருந்து இந்த விதிமுறை நீக்கப்படுவதாக, வெளிநாட்டு இந்திய விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி, பார்லிமென்ட்டில் அறிவித்து இருந்தார்.

இது வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கு துன்புறுத்தல்களில் இருந்து விடுதலை கிடைப்பதாக அமைந்து இருந்தாலும், 18 நாடுகளில் வேலைக்கு செல்வோர் குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன் மொத்தம் 173 நாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை பெற வேண்டியது அவசியமாக இருந்தது.

இவற்றில் சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட், குவைத், கத்தார், ஓமன் போன்ற வளைகுடா நாடுகளுக்கும்,

மலேசியா, சிரியா, ஜோர்டான், ஆப்கானிஸ்தான், தாய்லாந்து, இந்தோனேசியா, ஈராக், புருனே, ஏமன், சூடான், லெபனான் மற்றும் லிபியா ஆகிய 18 நாடுகளுக்கு வேலைக்கு செல்வோர், குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை பெற வேண்டியது அவசியம்.

கடந்த 1983ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியேற்றச் சட்டத்தில் வேலைக்கு செல்வோருக்கு மட்டுமே குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை அவசியம் என்று கூறப்பட்டு இருந்தது.

ஆனால், வேறு காரணங்களுக்காக குறைந்த நாள் வெளிநாடு செல்வோருக்கும் குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை பெறப்பட்டு வந்தது.

கடந்த ஆண்டு மட்டும் வேலை அல்லாமல் வேறு காரணங்களுக்காக வெளிநாடு சென்ற 5.5 லட்சம் பேர் குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை பெற்று வந்தனர்.

அவர்களும் இனி குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை பெற வேண்டிய அவசியம் இல்லை.

இதன் மூலம் அரசுக்கு ரூ.600 கோடி மிச்சமாகும் என்று கருதப்படுகிறது.

Wednesday, August 29, 2007

மத்திய அரசுக்கு ஹஜ் குழு கோரிக்கை

தமிழ்நாட்டில் இருந்து`ஹஜ்' புனித பயணம் செல்ல மேலும் 1,000 பேர்களை அனுமதிக்க வேண்டும்

மத்திய அரசுக்கு ஹஜ் குழு கோரிக்கை

தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் புனித பயணம் செல்ல மேலும் 1,000 பேர்களை அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஹஜ் குழு கோரிக்கை வைத்துள்ளது.


தமிழக ஹஜ் குழு துணைத்தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் இருந்து மெக்காவுக்கு ஹஜ் புனித பயணமாக இந்த ஆண்டு 1 லட்சத்து 57 ஆயிரத்து 400 பேர் செல்கிறார்கள். பிரதமர் ஒதுக்கீட்டில் 10 ஆயிரம் பேர் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.


அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் எத்தனை பேர் மெக்கா செல்லலாம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

இதன்படி, தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் புனித பயணம் செல்ல 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2 பெண்கள் உள்பட 26 பேர் நேரடியாக தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

மற்றவர்கள் குலுக்கல் முறையில் மத்திய அரசின் அனுமதியுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதன்படி இந்த ஆண்டு 3 ஆயிரத்து 468 பேர்கள் ஹஜ் புனித பயணத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் ஏறத்தாழ 400 பேர் அடங்குவார்கள்.

அரசு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை மானியமாக வழங்கப்படும். இது தவிர தனியார் மூலம் 4 ஆயிரம் பேர் ஹஜ்' புனித பயணம் மேற்கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டில் விண்ணப்பித்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தவிர மீதம் உள்ளவர்களுக்கும் இந்த புனித பயணம் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் கருணாநிதி கேட்டுக்கொண்டு உள்ளார்.

மத்திய மந்திரி அகமது வருகிற 2-ந்தேதி சென்னை வருகிறார். அப்போது புனித பயணம் செல்ல காத்திருப்போரில் மேலும் 1,000 பேர்களுக்காவது அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்.

ஹஜ் புனித பயணம் நவம்பர் 2-வது வாரம் தொடங்கும். இந்த புனித பயணம் மேற்கொள்பவர்கள் 40 நாளும் அங்கு தங்கியிருந்து, மீண்டும் தமிழ்நாட்டுக்கு திரும்பி வருவதற்கு விமான வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்கள் தங்குவதற்காக சென்னையில் தங்கும் இடம் ஏற்பாடு செய்யப்படும்.

இந்தியாவிலேயே கேரளாவில் இருந்து தான் அதிகமாக அதாவது 11 ஆயிரம் பேர் அரசு மானியத்தில் செல்கிறார்கள். உத்தரபிரதேசம், மராட்டியம், ஜம்மு-காஷ்மீர், 5-வதாக தமிழ்நாடு வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து அதிகமானவர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மத்திய அரசை கேட்டு வருகிறார்.

அரசு மானியத்தின் மூலம் மெக்கா சென்றால் ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரத்துக்குள் செலவாகும். அவரவர் தங்குவதற்கான ஓட்டலை தேர்ந்தெடுப்பதை பொருத்து செலவு குறையும். தனியார் மூலம் சென்றால் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் செலவாகும்.

தனியார் நிறுவனம் மூலம் செல்பவர்கள் சிரமத்துக்கு ஆளாவதால், ஹஜ் கமிட்டியின் கீழ் தனியாரையும் கொண்டு வரலாம் என்று அரசு திட்டமிட்டு உள்ளது.

இவ்வாறு துணைத்தலைவர் அபூபக்கர் கூறினார்.

Friday, August 24, 2007

படிப்பை பாதியில் விட்டவர்களுக்கு ....

படிப்பை பாதியில் விட்டவர்களுக்கு கல்வி அளிக்கும் திட்டம் விஸ்தரிப்பு

பள்ளிக்கு செல்லாத அல்லது பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விட்ட மாணவிகளுக்கு கல்வி அளிக்கும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா திட்டம் (கே.ஜி.பி.வி.,), மேலும் 16 ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.


மத்திய அரசு நிதி உதவியுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், தமிழகத்தில் ஏற்கனவே 37 ஒன்றியங்களில் அமலில் இருந்து வருகின்றன.

இதில், ஆயிரத்து 900 மாணவிகள் படித்து வருகின்றனர். 6, 7, 8ம் வகுப்புகளுக்குரிய வயதுடைய மாணவிகளுக்கு கல்வி கற்பித்து சான்றிதழ் வழங்கப்படுகின்றன. இந்த படிப்பை முடிக்கும் மாணவிகள், "ரெகுலர்' பள்ளிகளில் அடுத்த வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம்.

அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மேற்பார்வையில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயிலும் மாணவிகளுக்கு உணவு, தங்கும் இட வசதி உள்ளிட்டவை இலவசமாக அளிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த திட்டம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், சிவகங்கை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 16 ஒன்றியங்களுக்கு விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில், 950 மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று எஸ்.எஸ்.ஏ., துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹஜ் பயணிகளுக்கான அரசு உதவி தொகை குறைக்கப் படாது

ஹஜ் பயணிகளுக்கான அரசு உதவி தொகை குறைக்கப்படாது
மத்திய அரசு அறிவிப்பு

ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவி தொகையை குறைக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு `ஹஜ்' புனித பயணம் செல்லும் முஸ்லிம்களுக்காக ஆண்டு தோறும் அரசு சார்பில் மானியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியத்தை நிறுத்த வேண்டும் என்று அலாகாபாத் ஐகோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பளித்தது.


இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து அலாகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த சூழ்நிலையில் இது குறித்து டெல்லி மேல்சபையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. `ஹஜ்' பயணத்துக்கான மானியத்தை படிப்படியாக குறைக்குமாறு சிவசேனா எம்.பி., மனோகர் ஜோஷி யோசனை தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி கூறியதாவது:-

இந்த பிரச்சினை தற்போது சுப்ரீம் கோர்ட்டு விசாரணையில் உள்ளது. எனவே ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும். இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்போது தேவையான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும்.

`ஹஜ்' பயணிகளுக்கான அரசு உதவி தொகையை குறைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. அதே நேரத்தில், விமான கட்டண உயர்வு மற்றும் அதிகரித்து வரும் ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதற்கு தக்க வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கூடுதலாக பயணிகளை `ஹஜ்' யாத்திரைக்கு அனுப்புவதில் இந்தியா எந்த முடிவும் எடுக்க முடியாது. கூடுதல் பயணிகளை அனுமதிப்பது குறித்து சவுதி அரேபிய அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.

அந்த நாட்டை பொறுத்தவரை ஒரு நாட்டில் 10 லட்சம் முஸ்லிம்கள் இருந்தால் ஆயிரம் பேருக்கு அனுமதி அளித்து வருகிறது. அதன்படி இந்தியாவில், 14.70 கோடி முஸ்லிம்கள் இருப்பதால் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கி உள்ளது.

எனினும், மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று கூடுதலாக 10 ஆயிரம் பேருக்கு சவுதி அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த அனுமதி இந்த ஆண்டும் தொடரும். இந்த ஆண்டு இதுவரை ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் `ஹஜ்' யாத்திரை செல்வதற்கு விண்ணப்பித்து உள்ளனர்.

இவ்வாறு பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.